Skip to main content

இடி தாக்கியதில் கல்லூரி மாணவன் பலி! 

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வல்லியம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவி. இவர் வெளிநாட்டில் வேலை பணிபுரிந்து வருகிறார். இவரது மகனான வேலுமணி என்பவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் வேலுமணி தனது தயார் அமுதாவுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். 

CUDDALORE DISTRICT VIRUDHACHALAM  Hitting the thunder INCIDENT


அப்போது திடீரென வேலுமணி மீது இடி தாக்கியதில்,  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அவரது தயார் கதறி அழுதை பார்த்த, அப்பகுதி மக்கள் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர். அவரது உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அக்கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்