Skip to main content

கரோனா: ஐந்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதி!- திண்டுக்கல் மாவட்ட நலப்பணி இணை இயக்குனர் பூங்கோதை தகவல்!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா தனிப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 

இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட நலப்பணி இணை இயக்குநர் பூங்கோதையிடம் கேட்டபோது, "திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கொடைக்கானலைச் சேர்ந்த மருத்துவர். அவர் மலேசியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்து தனக்கு கரோனா வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

coronavirus dindigul govt hospital director

அவரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அந்த முடிவுகள் இன்று இரவுக்குள் கிடைக்கும். அது தவிர வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஒருவரும் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அதுதவிர பழனி அரசு மருத்துவமனையில் இரண்டு பேர் கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐந்து பேருக்கும் மருத்துவர்கள் நேரடி கண்காணிப்பில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்து பேருக்கும் இதுவரை கரோனா அறிகுறி இல்லை.
 

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகமாக கூட கூடிய பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது பொதுமக்கள் யாரும் வைரஸ் குறித்து பீதி அடைய வேண்டாம். வயது முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியே சென்று வந்தால் உடனுக்குடன் கைகளை நன்கு கழுவ வேண்டும்" என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.