Skip to main content

மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உயிரிழந்தால் இராணுவ வீரருக்கு இணையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும்: ஈஸ்வரன்

Published on 20/04/2020 | Edited on 20/04/2020



கரோனா நோயாளிகள் சிகிச்சையில் ஈடுபட்டு இருக்கின்ற மருத்துவர்களும், செவிலியர்களும், பாதுகாப்பை கொடுத்து கொண்டிருக்கின்ற காவல்துறை அதிகாரிகளும் நோய் தொற்று பாதித்து உயிரிழந்தால் நாட்டை காப்பாற்றுகின்ற இராணுவ வீரருக்கு இணையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஒரு மருத்துவர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போது அவரது உடலை அடக்கம் செய்ய மயானங்களின் முன்பு மக்கள் கூடி எதிர்த்த சம்பவம் அம்பத்தூரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது. அதேபோல இரண்டாவது ஒரு மருத்துவர் கொரோனா எதிர்ப்பு வேள்வியில் உயிர் தியாகம் செய்து அடக்கம் செய்வதற்காக முயற்சித்த போது எதிர்ப்பு தெரிவித்து உடல் கொண்டுவரப்பட்ட அவசர ஊர்தியையும் கீழ்ப்பாக்கத்தில் தாக்கிய நிகழ்வு நடந்திருக்கிறது. உடன் வந்த இரு மருத்துவர்களும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
 

e r eswaran

 

இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் இந்த அவசர காலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மருத்துவர்கள் இடையேயும், அவர்களது குடும்பத்தினரிடமும் அவநம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் பணியில் இருக்கின்ற மருத்துவர்கள் பணியை தொடர வேண்டுமா என்று யோசித்து தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 
 

http://onelink.to/nknapp


ஒருவருக்கு ஏற்பட்டால் அவர்களது இரத்த உறவுகளே அவரோடு பேசுவதற்கும், தொடுவதற்கும் அஞ்சுகின்ற சூழலில் அவர்களை தங்களது நோயாளிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லி தங்களுக்கு நோய் தொற்றலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அவர்களை தொட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 

நூற்றுக்கணக்கானவர்களை குணமடைய செய்து வீட்டிற்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நடக்கக் கூடாதது நடக்கும் போது அவர்களை அடக்கம் செய்வதற்கு கூட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற கோரமான நிகழ்வுகள் வேதனையானது. மனிதாபிமானத்துக்கும்,  தியாகத்துக்கும் முன் உதாரணமாக திகழ்கின்ற தமிழகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதை நம்பவே முடியவில்லை. ஆனால் ஏதோ நடந்துவிட்டது என்று இதை கடந்து போகவும் முடியாது. இன்னும் ஒரு நிகழ்வு இதைபோல நடந்துவிடக்கூடாது. 
 

மாநில அரசு சம்பளத்தை கூட்டி வழங்குகிறது. மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு வழங்கியிருக்கிறது. ஆனால் அவையெல்லாம் இருந்தும் அடக்கம் செய்ய அனுமதிக்காத மனிதாபிமானமற்ற செயல் மருத்துவர்களையும், மருத்துவ குடும்பங்களையும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு நிகழ்வுகளில் நடந்தது போல இனி மருத்துவர்கள் பாதித்து உயிரிழந்தால் நடக்க கூடாத சம்பவங்கள் நடக்காமல் இருக்க முழுமையான காவல்துறை பாதுகாப்பு வேண்டும். 
 

நாட்டின் எல்லையில் நின்று போர்க்களத்தில் நாட்டை காப்பாற்றுகின்ற இராணுவ வீரர்களுக்கு எந்த விதத்திலும் கரோனா போரில் ஈடுபட்டிருக்கின்ற மருத்துவர்கள் குறைந்தவர்கள் அல்ல. கரோனா நோயாளிகள் சிகிச்சையில் ஈடுபட்டு இருக்கின்ற மருத்துவர்களும், செவிலியர்களும், பாதுகாப்பை கொடுத்து கொண்டிருக்கின்ற காவல்துறை அதிகாரிகளும் நோய் தொற்று பாதித்து உயிரிழந்தால் நாட்டை காப்பாற்றுகின்ற இராணுவ வீரருக்கு இணையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும். கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. அதே சமயத்தில் விழிப்புணர்வுக்காக அரசு தரப்பில் அதிகமாக பயமுறுத்திய காரணத்தால் தான் மக்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.