Skip to main content

ஈரோட்டில் தொடரும் உச்சம்...! - கட்டுக்கடங்காத கரோனா...!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

erode corona

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்தது. இதன் காரணமாக கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிய சென்ற சில நாட்களாக மீண்டும் ஈரோட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் மீண்டும் கூடுதல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

 

இந்தநிலையில் சென்ற 7-ந் தேதி தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் படி கடந்த 18 ந் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக மேலும் 777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

 

நேற்று ஒரேநாளில் 237 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்புடன் 75 வயது முதியவர் ஒருவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்துள்ளது.

 

தற்போது மாவட்டம் முழுவதும் 3,366 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகரப் பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாகப் பரவி வருகிறது.

 

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு இரவு நேர ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறோம். ஊரடங்கின் போது சாலைகள் வெறிச்சோடித் தான் காணப்படுகிறது. ஆனால் வைரஸ் பரவல் தான் கட்டுக்குள் வரவே இல்லை. ஈரோடு மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 4,500 முதல் 5,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலோனோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது ஈரோடு மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைவுதான்.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் 60 வயதை கடந்த முதியவர்கள்தான். எனவே 60 வயது தாண்டிய முதியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.