Skip to main content

கோர்ட் நடவடிக்கையை நிறுத்தக்கோரி கொடைக்கானலில் முழு கடையடைப்பு!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலமான கோடை இளவரசியை காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோடைக்கு வந்து கோடை இளவரசியை இயற்கையை ரசித்து பார்த்துவிட்டு போய் வருவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கொடைக்கானல் மற்றும் கீழ்மலை,மேல்மலை மலைப்பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள்,வணிகவளாகம், வீடுகள் என இருந்து வருகிறது. இப்படி இருக்கக் கூடிய கட்டடங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கிறது.

      

  Complete Bandh in Kodaikanal!!

 

இப்படி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து விதிமுறைகளை மீறிய கட்டிய 45 கட்டடங்களுக்கு சீல் வைத்து ஜனவரி 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இருந்த 45 கட்டடங்களுக்கு மின் இணைப்பை துண்டித்து அந்த கட்டடங்களுக்கு சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

 

அதன் பின் மீண்டும் மதுரை ஐகோர்ட் கிளை கொடைக்கானலில் 1471 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இருக்கிறது அந்தக் கட்டடங்களையும் ஆய்வு செய்து அந்த கட்டடங்களுக்கு சீல் வைத்து அதன் அறிக்கையை வருகிற மார்ச் 16ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

  Complete Bandh in Kodaikanal!!

 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோடையிலுள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் சர்வ கட்சியுடன் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். கோர்ட் உத்தரவை நிறுத்தி எங்களுக்கு கருணை அடிப்படையில் கால அவகாசம் கொடுங்கள் அதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. அதுபோல் 25 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் ப்ளானை நிறைவேற்றி கொடுங்கள் என புகார் மனு கொடுத்திருந்தனர். அப்படி இருந்தும் கோடை நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறிய  கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்க தயாராகி வந்தனர். இந்த விஷயம் கோடை மக்களுக்கு தெரிந்ததின்  பேரில்தான் திடீரென கோடையில் வசிக்கக்கூடிய லாட்ஜ் உரிமையாளர்களும், வணிகப் பெருமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என ஒட்டுமொத்த கோடையில் உள்ள மக்களும் நகரில் தங்கும் விடுதிகளையும், உணவகங்களையும், கடைகளையும் ஒட்டு மொத்தமாக இழுத்து மூடி கடையடைப்பு போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

 

  Complete Bandh in Kodaikanal!!

 

இதன் இதன் மூலம் சுற்றுலா பயணிகளும் கோடைக்கு வரத்து குறைந்தது. இந்த கடையடைப்பு போராட்டம் மூலம் கோர்ட் விதித்துள்ள உத்தரவை நிறுத்தி கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கோடையில் உள்ள மக்களும், சர்வகட்சியினரும்  குரல் கொடுத்து வருகிறார்கள். இதை மீறி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கினால் தொடர் போராட்டங்களில் இறங்கவும் தயாராகி வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Chief Minister M.K. Stalin trip to Kodaikanal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இந்நிலையில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.