Skip to main content

கல்லூரி பேருந்து மோதி ஐந்தாம் வகுப்பு மாணவர் பலி

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

college bus

 

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி வாகனம் மோதி மாணவர் உயிரிழந்தார். 

 

நாமக்கல் மாவட்டம் செம்மங்காடு பகுதியை சேர்ந்த மாணவர் பிரபாகரன். இவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு இருந்த பொழுது அவ்வழியே வந்த  தனியார் கல்லூரி பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் இடது புறம் திருப்பினார். அப்பொழுது  அங்கு பேருந்திற்கு காத்துக்கொண்டிருந்த பிரபாகரன் மீது மோதியது. இவ்விபத்தில் மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் வந்த மாணவ மாணவிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  மேலும் அங்கு இருந்த மாடு ஒன்றும் உயிரிழந்துள்ளது.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்