Skip to main content

சேலம் விரைந்த முதல்வர்; கடும் கட்டுப்பாடுகள் அமல்!

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

CM MK Stalin in salem to inspect

 

அனைத்து துறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் கள ஆய்வு செய்வதற்காக,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப். 15, 2023) தனி விமானத்தில் சேலம் வந்தார். அங்கு இரண்டு நாட்கள் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.

 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தி வரும் திட்டங்கள் முழுமை பெற்றுள்ளனவா? அவற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், குறைகள் குறித்து ஆய்வு செய்ய கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

 

முதல் கட்டமாக பிப். 1 மற்றும் 2ம் தேதிகளில் வேலூர் மண்டலத்தில் ஆய்வு நடத்தினார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, சேலம் மண்டலத்தில் பிப். 15, 16 ஆகிய இரு நாட்கள் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை (பிப். 15) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சேலம் வந்தார். புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் விவசாயிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினருடன் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு, நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடுகிறார். இவ்விரு கூட்டங்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடக்கிறது.

 

இதையடுத்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் மதிய உணவை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 4.30 மணிக்கு அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், துறை செயலர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் சேலம் மண்டலத்தில் நடந்து வரும் மற்றும் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆய்வு மாளிகையில் இரவு உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்கிறார். மறுநாள் (பிப். 16) காலை 9.30 மணியளவில் மீண்டும் அனைத்து துறை செயலர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதிய உணவுக்குப் பிறகு தனி விமானத்தில் சென்னைக்கு கிளம்புகிறார். 

 

இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், சேலம் மாநகராட்சி ஆணையர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் துறை செயலர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்வர் வருகையையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கள ஆய்வு நடக்கும் அறைக்குள் செல்ல ஊடகத் துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமராமேன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊடகங்களுக்குத் தேவையான செய்தி அறிக்கைகள், படங்கள், காணொளி காட்சிகள் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

மேலும், மாவட்டம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் எழாத வகையில் காவல்துறை கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.  கள ஆய்வுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பால் பண்ணை, உழவர் சந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் என எங்கேயாவது திடீரென்று நேரடி ஆய்வுக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற நேரடி ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளிட்டோரும் உடன் வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல்வர் எந்த இடத்திற்கு நேரில் ஆய்வுக்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பும் பதற்றமும் அரசு அலுவலர்கள் தரப்பில் தொற்றிக் கொண்டுள்ளது. இதற்கேற்ப அனைத்து துறை பணியாளர்கள், ஆசிரியர்களையும் முதல்வர் ஆய்வு நடக்கும் இரண்டு நாட்களிலும் பணியில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.