Skip to main content

பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 8 கிலோ கட்டியை நீக்கி சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

Chidambaram Kamaraj Government Hospital doctors remove 8 kg tumor from woman's uterus

 

 

சிதம்பரத்தை சேர்ந்த 26 வயதுடைய லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.  இதனைதொடர்ந்து சிதம்பரம் அரசு மருத்துவமனை சென்ற அவரை உயர் ரக பரிசோதனைக் கருவிகள் இல்லாததால் மேல் பரிசோதனைக்காக அண்ணாமலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அங்கே இரு வாரங்கள் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் லதாவுக்கு கர்ப்பப்பைக்கு அருகில் உள்ள வலது சினைப்பையில் பெரிய நீர்க்கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அறுவை சிகிச்சைக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மயக்குனர்கள்  ஒப்புதல் தர மறுத்ததால், அவரை கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

பின்னர் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி லதா புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜிப்மர் மருத்துவர்களும், தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவமனை உள்ளதால் அங்கே சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் எனக்கூறி அனுமதி மறுத்துவிட்டனர்.

 

இந்தநிலையில் செய்வதறியா திகைத்த லதா மீண்டும் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு தனக்கு தரப்பட்ட அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் எடுத்துக்கொண்டு கடந்த 25ஆம் தேதி  வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த  மருத்துவர் லதாவை உடனே அனுமதித்தார். பின்னர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

 

மேலும் பணி மருத்துவர் செய்த பரிசோதனைகளில் 36 வாரங்கள் கடந்த சிசு இருக்கும் அளவில் வயிற்றில் உள்ள கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.  கட்டியின் நீள அகலம் 30 செ.மீ x 30 செ.மீட்டரும், அதனுள் 8 லிட்டர் சினைப்பை சுரபி நீர் இருப்பதும் மீயொலி நோட்டம்  மூலம் தெரிந்தது.

 

அப்போது அப்பெண் வலியில் துடித்ததாலும், சினைப்பை கட்டி உடையும் நிலையில் இருந்ததாலும், மயக்குனரிடமும் விடுப்பிலிருக்கும் தன் சக மருத்துவர்களிடமும் கலந்தாலோசித்து, அன்று இரவே 9 மணிக்கு அறுவை சிகிச்சை (Laprotomy) செய்ய முடிவு செய்யப்பட்டது.

 

புற்றுநோய் கட்டியா அல்லது சினைப்பை நீர்க்கட்டியா என்று கண்டறிய செய்யப்படும் CA125 எனும் ரத்தப்பரிசோதனையில் 15 யூனிட் இருந்தது (35க்கு மேல் என்றால் புற்றுநோய் கட்டி என்று அர்த்தம்), சர்வதேச சினைப்பை கட்டி வழிமுறை அமைப்பு  பரிந்துரை செய்த விதிகளின்படி இந்த கட்டி புற்று நோய் தன்மை அற்றது (B1B3) என்பதும் தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த பரிசோதனைகளால் அப்பெண்ணுக்கு உள்ளது வலது சினைப்பை கட்டி என்று உறுதி செய்யப்பட்டு, அவருக்கு கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை  செய்யலாம் என்றும் மருத்துவர் குழு தீர்மானித்து அறுவை சிகிச்சையை துவங்கினர்.

 

கட்டி பெரிதாக இருந்ததால், கட்டியில் துளையிட்டு அந்த நீர் சிறிய பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு கட்டி அகற்றப்பட்டது பல மாதங்களாக அவதியுற்றுவந்த லதா பூரண குணமடைந்துள்ளார்.

 

மிக சிறப்பாக அறுவை சிகிச்சையை செய்த குழு -  மரு.நீதிமாணிக்கம் (மயக்குனர்), மரு.நந்தினி, மூத்த மகப்பேறு மற்றும் பெண் பிணியியல் மருத்துவர், டாக்டர் ராகுல் ஆனந்த், அன்றைய பணி மகப்பேறு மருத்துவர், அறுவை அரங்க செவிலியர் மகாலக்ஷ்மி, அறுவை அரங்க உதவியாளர்கள் சௌந்தர்ராஜன் மற்றும் ஷாநவாஸ். அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவிற்கு இப்படிப்பட்ட மேம்பட்ட அறுவை சிகிச்சை தன் வயிற்றில் இருந்த பெரும் சுமை குறைந்தது என்றும், தான் பூரண நலமோடு இருப்பதாகவும், நிறைவுடன் தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் லதா. மருத்துவகுழுவினரின் சேவைகளை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.