Skip to main content

செல்போனில் பேசிய காதலன்... கதறிய காதலி... பரவும் ஆடியோ உரையாடல்

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

 

ஸ்மார்ட் போனும், சமூக ஊடகங்களின் வளர்ச்சி ஒரு பக்கம் பெரும் துணையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பலருக்கு எதிரியாகவே மாறிவிட்டன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவா்கள் அதிகாரத்தால் மிரட்டுபவா்களும், காதல் மயக்கத்தில் காமுகர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பவா்களும் தான்.

 

cellphone


அந்த மாதிரி காதல் வானில் சிறகடித்து பறந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ஒரு காதல் ஜோடி திடீரென்று அவா்களுக்குள் ஏற்பட்ட காதல் கசப்பால் பிரிய நோ்ந்தது. அப்படி பிரிந்ததால் ஒருவரை ஒருவா் தரக்குறைவாக பேசும் அளவுக்கு சென்று விட்டனா்.  இதன் பிரதிபலிப்பு அவா்கள் காதலிக்கும் நேரத்தில் அவா்களுக்குள் நடந்த ரகசிய சந்திப்பு கிசு கிசு விசயங்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது.
 

குமரி மாவட்டம் அருமனை பகுதியை சோ்ந்த கல்லூரி மாணவியும் மார்த்தாண்டத்தை சோ்ந்த வாலிபா் ஒருவரும் காதலித்து வந்துள்ளனா். அப்போது அவா்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை காதலன் தனது ஸ்மார்ட் போனில் படம் புடித்து வைத்துள்ளான். தற்போது அந்த காதலா்கள் பிரிந்து விட்ட நிலையில் காதலன் வெளி நாட்டில் இருக்கிறார். அவா்களுக்குள் நடந்த ஒரு உரையாடல் தான் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.


 

இதில் காதலன், ''என்னை காதலித்து என்னோடு உல்லாசமாக இருந்து விட்டு இப்போது எதற்காக என்னை வெறுத்தாய்? என்கிறான். அதற்கு காதலி, ''நீயும் தான் என்னை வெறுத்தாய்'' என கூற இருவரும் சண்டை போடுகிறார்கள். இதில் காதலி கெட்டவார்த்தைகளால் பேசுகிறாள். அதே போல் காதலனும் பேசுகிறான். ஒரு கட்டத்தில் காதலனுக்கும் அவனுடைய அத்தைக்கும் உள்ள கள்ளத்தொடா்பையும் கூறுகிறாள். 


 

இதை தவறு என்று கூறி அதனால் ஆத்திரமடைந்த காதலன், நானும் நீயும் அறைக்குள் இருக்கும் போது உன்னுடைய முமு நிர்வாண படம் என் கிட்ட இருக்கு அதை எல்லாம் உன்னுடைய கல்லூரி தோழிகளுக்கும் எனது நண்பா்களுக்கும் அனுப்பி விடுவன் என மிரட்டுகிறான். இதற்கு காதலி, நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் செத்து விடுவேன் அதன்பிறகு உயிரோடு இருந்து என்ன பலன் என கூறுகிறாள். இப்படி 4 நிமிடம் ஆடியோ உரையாடல் ஓடுகிறது. 
 

புகைப்படத்தடன் சமூக ஊடகங்களில் வரும் இந்த உரையாடல் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகின்றனா் சமூக ஆர்வலர்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.