Skip to main content

தமிழகத்திலேயே அதிக ஓட்டில் திமுக வெற்றிபெற்ற திண்டுக்கல் தொகுதி! உற்சாகத்தில் உ.பி.க்கள்!!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

அதிமுகவிற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய உடனே நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் தனித்து போட்டியிட்டார். அப்போது அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை களமிறக்கினார். அப்பொழுது சுயேட்சை சின்னமாக இருந்த இரட்டை இலையில் மாயத்தேவர் போட்டியிட்டதின் மூலம் வெற்றி பெற்றார். 

 

  Dindigul constituency in Tamil Nadu has DMK won the highest number of votes

 

அன்றிலிருந்து இரட்டை இலை சின்னம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருகிறது. அதை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருக்கும் வரை இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமலேயே அ.தி.மு.க.வில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது கூட்டணி கட்சிக்கு ஒதுக்காத இந்த தொகுதியை தற்போது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ம.க.விற்கு ஒதுக்கியதின் பேரில் ஜோதிமுத்துவை வேட்பாளராக பா.ம.க. அறிவித்தது. இதனால் அ.தி.மு.க. கட்சித் தொண்டர்களும் பெரும் அதிருப்தியில் இருந்தனர். 

 

 

அதோடு தேர்தல் பணியிலும் ஆளுங்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து இருந்து வந்தனர். அதுபோல் தி.மு.க. சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயி கட்சியில் சாதாரண தொண்டருமான வேலுச்சாமியை திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக ஐ.பி. பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கழகத் தலைவர் ஸ்டாலின் ஐ.பி.யின் பரிந்துரையின் பேரில் வேலுச்சாமிக்கு திண்டுக்கல் தொகுதியில் போட்டி போட சீட் கொடுத்தார். ஏற்கனவே 1984க்கு பிறகு தி.மு.க. இத்தொகுதியில் போட்டி போட்டதால் உ.பி.க்களும் உற்சாகமாக தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகள் தி.மு.க வசம் இருந்ததால் இத்தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களான கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளரும், கொறடாவுமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் தலைமையிலும் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றினார்கள். 

 

  Dindigul constituency in Tamil Nadu has DMK won the highest number of votes

 

அதன் அடிப்படையில் தான் கடந்த மாதம் 18ம் தேதி திண்டுக்கல் பாராளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்ற வாக்காள மக்களின் ஓட்டுக்களும் திண்டுக்கல் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இப்படி வைக்கப்பட்டிருந்த வாக்காள மக்களின் ஓட்டுக்களை தான் கடந்த 23ம் தேதி எண்ணப்பட்டதின் மூலம் தி.மு.க. வேட்பாளரான வேலுச்சாமி 7லட்சத்து 46ஆயிரத்து 523 ஓட்டுக்களும், அ.தி.மு.க. வேட்பாளரான ஜோதிமுத்து 2லட்சத்து 7ஆயிரத்து 551 ஓட்டுக்களும் வாங்கினார். இதன்மூலம் வேலுச்சாமி 5லட்சத்து 38ஆயிரத்து 972 வாக்கு வித்தியாசத்தில் தமிழகத்திலேயே வேலுச்சாமி அதிக ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றதின் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான வினயிடம் சான்றிதழை பெற்றார். அதை மாவட்ட கழக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பி. தலைமையில் சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட சில பொறுப்பாளர்களுடன் சென்னைக்கு சென்று கழகத் தலைவர் ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வெற்றி பெற்ற சான்றிதழை கொடுத்து ஆசி வாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. உறுப்பினரான வேலுச்சாமி. 

 

DMK

 

ஆனால் இந்திய அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் வேலுச்சாமி பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம் சட்ட்மன்ற தொகுதிகளில் டெபாசிட் கூட அ.தி.மு.க. வாங்கவில்லை அந்த அளவுக்கு தி.மு.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று சாதனை படைத்து இருக்கிறது. 

 

 

இப்படி 35 வருடங்களுக்கு பிறகு  திண்டுக்கல் தொகுதியில் உதயசூரியன் உதிப்பதற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தேர்தல் ஆலோசனையின் பேரில் மேற்கு மாவட்டச் செயலாளர் கொறடா சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்களின் கடுமையான தேர்தல் பணியின் மூலம்  திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. கோட்டையாக உருவாகி இருக்கிறது!.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.