Skip to main content

மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு..! அமைச்சர் அஞ்சலி

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

The body of the student was handed over to her parents..!

 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இரண்டு பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை ஆராய ஜிப்மர் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் மூன்று பேர் அடங்கிய குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவில் சித்தார்த் தாஸ், குசாகுமார் சாஹா, அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

 

 

 

பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த அறிக்கையை மருத்துவர்கள் குழு ஒரு மாதத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

உடலை இன்று (23/07/2022) பெற்றுக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் நேற்று சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை 07.00 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே, வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஜஜி சந்தோஷ்குமார் முன்னிலையில் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சி.வி.கணேசன் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரும் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

 

 

 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து மாணவியின் உடலை, தங்கள் சொந்த ஊரான கடலூர் மாவட்ட பெரியநெசலூர் கிராமத்திற்கு பெற்றோர் கொண்டு சென்று இன்று மாணவியின் உடலை அடக்கம் செய்ய உள்ளனர். இதன் காரணமாக பெரியநெசலூர் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் இறுதி ஊர்வலத்தில், மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியநெசலூர் கிராமத்தின் எல்லையில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்