Skip to main content

நாட்டுச் சக்கரையில் உயிர்கொல்லி வேதிப்பொருள்... அபாயத்துடன் எச்சரிக்கை

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

வாங்க சூடா ஒரு டீ சாப்பிட்டு போலாம் என நண்பர்களை அழைப்பதும், நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு டீ கொடுத்து உபசரிப்பதும் நமது பண்பாடு.. இப்போதெல்லாம் பலரும் சொல்வது சீனி சர்க்கரை என்கிற அஸ்கா சர்க்கரை டீ குடித்தால் சுகர் வருகிறது ஆகவே நாட்டுச் சர்க்கரை டீ குடித்தால் நல்லது என்ற கருத்து நிலவுகிறது. இந்த நாட்டுச் சர்க்கரை உடலில் எந்த நோயையும் கொடுக்காது என்ற உறுதியான நம்பிக்கைதான் அதற்கு காரணம். இது முற்றிலும் உண்மையும் கூட ஆனால் அந்த நாட்டுச் சர்க்கரை கலப்பிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.நாம் வாங்கும் நாட்டு சர்க்கரை அப்படி தூய்மையாக இருக்கிறதா என்றால் நூறு சதவீதம் இல்லை. அதிலும் கலப்படம் செய்து வருகிறது வியாபார கும்பல்.

 

 Biochemicals in the  Nattusarkkarai... Warning With Risk


இதில் கொடுமை என்னவென்றால் உயிரை கொல்லும் ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள் என்பதுதான் அபாயகரமான செய்தி.

இன்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி கவுந்தப்பாடியில் உள்ள நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்க குடோனுக்குச் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். அதில் உள்ள 70 குடோன்களிலும் பரிசோதனை செய்து 9 உணவு மாதிரிகளை எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

 

 Biochemicals in the  Nattusarkkarai... Warning With Risk


"சார் இந்த நாட்டுச் சர்க்கரையில் அஸ்கா கலப்பதோடு ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட் என பல ரசாயன வேதிப் பொருட்களை கலக்குகிறார்கள். இதை பயன்படுத்தும் மக்களுக்கு கேன்சர் நோய் உட்பட பல வியாதிகள் வந்து உயிரை கொல்லும் அபாயம் உள்ளது" என்கிறார்கள் அதிகாரிகள் .

ஏற்கனவே இது போன்ற ரசாயன வேதிப் பொருட்களை நாட்டுச் சர்க்கரையில் கலந்ததாக 17 வழக்குகள் உற்பத்தியாளர்கள் மீது ஈரோட்டில் உள்ளது. நாட்டுச் சர்கரையை நம்பி டீ குடித்தால் அதில் உள்ள ரசாயனம் மனிதனை குடிக்கும்.

உணவுப் பொருளில் கலப்படம் செய்யும் கொடுங்கோல் வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று அதிகாரிகள் ஆய்வுகளை வெளிப்படையாக செய்து கலப்படத்தை தடுக்க வேண்டும் என்பதே உணவு சுகாதர நிபுணர்களின் கோரிக்கை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.