Skip to main content

அமைச்சர் செங்கோட்டையன் மீது பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு புகார்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

அமைச்சர் செங்கோட்டையன் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தேர்தல் விதிகளுக்கு புறம்பாகவும் பேசியதாக புதுக்கோட்டை பாசிச எதிர்ப்பு கூட்டபை்பினர் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தனர்.

    

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் திரளாக வந்து அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

 

அந்த மனுவில்..

   

petition

 

திருப்பூரில் 23 ந் தேதி  நடந்த அதிமுக கூட்டணி கட்சி ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு இஸ்லாமியர்களின் மனம் புண்படும்படியாக உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு முறம்பாகவும் இந்திய இறையாண்மைக்கும் சகோதரத்துவத்திற்கு எதிராகவும் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த செயல் நல்லிணக்க சமுதாயத்தில் கலவரத்தை தூண்டும் விதமாகவும் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்