Skip to main content

அ.தி.மு.க. பொதுக்குழு - ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கு ஜூலை 28- ல் விசாரணை!  

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

A.D.M.K. General Committee- O. Panneerselvam's case will be heard on July 28!

 

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வரும் ஜூலை 28- ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், கடந்த ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை வரும் ஜூலை 28- ஆம் தேதி அன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை விசாரிக்கவுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்