Skip to main content

''ஏமாற்றுபவர்களாக இல்லாமல் உங்களுக்கு ஏற்றவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்''- தமிழிசை அட்வைஸ்

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

 ''Accept those who are right for you without being deceitful '' - Tamizhisai Advice

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவிகள் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது அவர் ஏமாற்றுபவராக இல்லாமல் ஏற்றம் தருபவராக இருக்க வேண்டும் என கூறினார்.

 

அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, 'கிடைப்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு அதன் மூலம் நமது பணியை ஆற்றி அதற்குப் பின்பு பல படிகளில் ஏறிக் கொண்டே போக வேண்டுமே தவிர எதற்கும் தயங்கி கீழேயே நின்று விடக்கூடாது.நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். இப்பொழுதெல்லாம் கல்வி கற்கிறார்கள், விரும்பிய வேலைக்காக ஓடுகிறார்கள் ஆனால் குடும்ப வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள் இளைஞர்கள் பெண்களெல்லாம் இன்று 30,  35 வயதில் தான் வயதிற்குப் பிறகுதான் திருமணத்தைப்பற்றிய சிந்திக்கிறார்கள். ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். எப்படி நீங்கள் கல்வியை வளர்த்துக் கொள்கிறீர்களோ அதேபோல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதும் சரியான நேரத்தில்  தாய் தந்தையர் சொல்வதைக் கேட்டு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'தாய் சொல்வதையும் கேட்டு' என்ற உடனே தமிழிசை காதல் திருமணத்திற்கு எதிரானவர் என்று ஒரு பதிவு இன்னேரம் வந்திருக்கும். நாமே தேர்ந்தெடுக்கலாம் ஆனால் அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நமக்கு உரியவர்களாக, ஏமாற்றுபவர்களாக இல்லாமல் ஏற்றவர்களாக... தாய் தந்தை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.