Skip to main content

86 லட்சம் மோசடி... டெல்லி வாலிபரை கைது செய்த திருச்சி சி.பி.சி.ஐ.டி!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

86 lakh scam ... Trichy CBCID arrests Delhi teenager

 

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கனி பாட்சா (எ) ஏபிஎல் பர்வீன் கனி என்பவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர்கள், தங்களை எல்ஐசி ஊழியர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு பேசியுள்ளனர். அப்போது பர்வீன் கனியின் எல்ஐசி பாலிசி முதிர்வடைந்துவிட்டதாகவும் அதனை மத்திய அரசின் சில திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். மத்திய அரசின் திட்டம் என்பதால் அதனை நம்பிய பர்வீன் கனி,  படிப்படியாக 86 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார்.

 

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பர்வீன் கனி, இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இந்த வழக்கு விசாரணையானது சி.பி.சி.ஐ.டி பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி பெரம்பலுார் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, எஸ்எஸ்ஐ சந்திரசேகரன், ஏட்டு சந்திரசேகரன், ஆனந்த் பாபு ஆகியோர் கொண்ட டீம் டெல்லியில் சென்று முகாமிட்டு நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்ட கிழக்கு டெல்லியைச் சேர்ந்த அபினேஷ்குமார் (எ) அமன் (26) என்பவரை கைதுசெய்து, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.