Skip to main content

ஆற்றில் நீராடிய 3 பேர் உயிரிழப்பு; ஆடிப் பெருக்கில் நிகழ்ந்த சோகம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

 3 people lost their life after swimming in the river; The tragedy happened on the day of Audi Peruku

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் குளித்த மூன்று பேர் ஆடிப்பெருக்கு நாளிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல நீர்நிலைகளில் குளித்து மக்கள் வழிபடுவது வழக்கமாகும். ஈரோடு மாவட்டம் பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்றில் இறங்கி மக்கள் குளித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கொடுமுடி அருகே வெங்கப்பூர் பகுதியில் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பலர் குளிக்கச் சென்றனர். அதில் குப்புராஜ், ஜெகதீசன், 14 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தற்போது சிறுமியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இருவரின் உடலை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆடிப்பெருக்கு நாளிலேயே ஆற்றில் நீராடிய மூன்று பேர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்