Skip to main content

பதிவான வாக்குகளில் வித்தியாசம்.... விராலிமலை வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

Difference in registered votes .... Viralimalai vote counting stop

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும், திமுக வேட்பாளராக பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். இன்று (02.05.2021) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் சுற்று எண்ணிக்கையின்போது ஒரு இயந்திரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் பரபரப்பு ஏற்பட்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

 

அதன் பிறகு அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை 2வது சுற்று எண்ணத் தொடங்கிய நிலையில், அதில் 4 பெட்டிகளில் உள்ள வாக்குகளுக்கும் இவிஎம் இயந்திரத்தில் உள்ள வாக்குப்பதிவையும் பார்க்கும்போது சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று திமுகவினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

தொடர்ந்து இரண்டு சுற்றுகள் கூட முடிவடையாத நிலையில் ஒரு மணியைக் கடந்தும் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர்கள் இப்பொழுது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தர உள்ளனர். மேலும், திமுக கட்சித் தலைமை வரை மா.செ செல்லப்பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அதிகாரியிடமும் புகார் மனு கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான நீச்சல் தொட்டியில் மூதாட்டியின் சடலம்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023
nn

 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் தோட்டத்தில் உள்ள நீச்சல் தொட்டியில் மூதாட்டி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஓலைமான்பட்டியில் தோட்டத்தில் நீச்சல் தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தின் வழியே சென்ற 83 வயது மூதாட்டி பாலாயி என்பவர் நடந்து சென்றபொழுது கால் இடறி உள்ளே விழுந்ததாகவும், இதில் மூதாட்டி இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.