Skip to main content

’ராமதாஸ் மேல் நல்ல மதிப்பு வைத்துள்ளேன்’ - வைகோ

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் அதிமுக - பாமக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு வைகோ,  ‘’அதிமுக - பாமக கூட்டணி குறித்து கருத்து கூற தேவையில்லை.  ஒவ்வொரு கட்சியும் உடன்பாடு வைக்கும்போது தொகுதியை பிரித்துக்கொள்வர்.    கூட்டணியை விமர்சித்தால் எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது.  நான் பொதுவாக  மற்ற கட்சிகளை விமர்சிப்பதில்லை.  ராமதாஸ் மேல் நல்ல மதிப்பு வைத்துள்ளேன்.  சமூக நீதிக்காக போராடியவர்.

 

 நான் திமுக கூட்டணியில் உள்ளேன்.  அந்த கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன்.  40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.   திமுகவில் நாங்கள் இருக்கிறோம் என்பதை அந்த கட்சி அறிவிக்கும்’’என்று தெரிவித்தார்.  

 

v


 

சார்ந்த செய்திகள்