சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை திறந்து வைத்தனர். இதற்காக அதிமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியினரை அழைத்து வந்தனர். ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள்,அண்ணா நினைவிடம் அருகே உள்ள கலைஞர் நினைவிடத்திற்கும் சென்றனர். அப்போது பலர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.