Skip to main content

‘ஜென்டில்மேன்’ ஆன கே.டி.ராஜேந்திரபாலாஜி! -பிரச்சாரத்தில் வழக்கமான ஒன்று மிஸ்ஸிங்!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

அதென்னவோ,  ரொம்பவே மாறிவிட்டது போல் இருக்கின்றன அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பேச்சும் நடவடிக்கைகளும். கடந்த வாரம், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழு மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி., மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட்டார் அல்லவா! அதனாலோ என்னவோ, இந்த மாற்றம். நாங்குநேரி பிரச்சாரத்தில் வழக்கமான அவரது அதிரடி பேச்சைக் கேட்க முடியவில்லை.   

 

rajendra balaji campaingning style

 

 

களக்காடு ஒன்றிய பகுதிகளில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டபோது - “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் மகத்தான இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள். அரசின் நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும் காலம் இது. எனவே மக்கள் இந்த அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் ஆட்சி நடக்கிறது. எல்லா சமுதாய மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சியாக எடப்பாடியார் ஆட்சி திகழ்கிறது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் எடப்பாடியார் அவர்களின் ஆட்சிக்கு அதிகமான ஆதரவு உள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற ஜாதி கலவரங்கள், மின்வெட்டு, கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு, அரசியல் படுகொலைகள்  தமிழக மக்கள் மனதில் இன்றும் கொளுந்துவிட்டு எரிகிறது. எடப்பாடியார் ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து கிடையாது, மின்வெட்டு கிடையாது, ஜாதி கலவரம் கிடையாது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை கிடையாது, கந்து வட்டி கொடுமை கிடையாது,  நில அபகரிப்பு கிடையாது. அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.   

திமுகவை ஒருக்காலும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2006 முதல் 2010 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் அராஜகங்களை அட்டூழியங்களை தமிழக மக்கள் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ   மாட்டார்கள். தற்போது எடப்பாடியார் ஆட்சியில் குடி மராமத்து பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. குடிமராமத்துப் பணியின் நாயகனாக எடப்பாடியார் திகழ்கிறார். நாங்குநேரியில் எங்கு பார்த்தாலும் எடப்பாடியார் அலை வீசுகிறது.  மதத்தைச் சொல்லி, இனத்தைச் சொல்லி இனி திமுகவால் ஓட்டு கேட்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்தியாவில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்திருக்கும்.” என்றவர் பேச்சில், வழக்கமான தனிநபர் தாக்குதல் இல்லை.  

 

rajendra balaji campaingning style

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சூரியன் மக்களை வதைக்கிறது!” - வெயில் சூட்டை ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

 "The sun oppresses the people!" -Rajendra Balaji who compared the heat!

விருதுநகர் மாவட்டம் – சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்ததான முகாம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி “மேடைக்கு முன்பாக வெயிலில் நீங்கள் காய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.  

சூரியன் மக்களை வதைக்கிறது. அதனால்தான், நாங்களும் திறந்தவெளி மேடையில் நின்று வெயிலின் கொடுமையை அனுபவிக்கிறோம். சூரியன் ஏற்படுத்தும் கஷ்டத்தை உணர்ந்தால்தானே, அதிலிருந்து விடுபடுவதற்கு உரிய ஆயத்தப்பணிகளை, நாங்களும் செய்ய முடியும்? இந்தத் துன்பத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும். திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதிமுக, மக்களை நம்பியே தேர்தலில் களம் காண்கிறது.  திமுகவோ, கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. வெற்றி அருகில் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் சீர்கேடுகளைச் சொல்லியே வாக்கு சேகரிக்கவேண்டும். அப்போது, பட்டாசுத் தொழில் பிரச்சனை, நெசவாளிகள் பிரச்சனை, அரசு ஊழியர்கள் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதனால்,  டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் கரம் ஓங்கும். தமிழ்நாட்டின்  நலன் காக்க, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராடுவார்கள்.அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார். 

Next Story

செய்தியாளர் மருத்துவச் செலவுக்கு ராஜேந்திர பாலாஜி ரூ. 2 லட்சம் நிதி!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Rajendra Balaji Rs. 2 lakh fund for journalist's medical expenses!

திருப்பூர் மாவட்டம் – பல்லடம் தாலுகாவில் தனியார் டிவி செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர், கடந்த வியாழன் இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி டிவி செய்தியாளர் நேசபிரபு மருத்துவச் செலவுக்கான ரூ.2 லட்சத்தை விருதுநகர் மாவட்ட டிவி செய்தியாளர் ஜெய்லானியிடம் கொடுத்துள்ளார்.