Skip to main content

மகனை தலைவராக்க அப்பா கடும் முயற்சி ! -காங்கிரஸ் கலாட்டா !

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 

          

ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக தனது ஆதரவாளர் கே.எஸ் அழகிரியை கொண்டு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம். ஐ.என்.எக்ஸ்.மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சூழலில், அவருக்கு ஆதரவாக எந்த துரும்பையும் அழகிரி எடுத்துப் போடவில்லை. சிதம்பரத்தின் ஆதரவாளர்களை புறக்கணிக்கப்பது என்பதில் ஆரம்பித்து பல்வேறு நிலைகளில் அழகிரியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, சிதம்பரத்தின் ஆதரவாளர் என்கிற நிலையையே மறந்து போனார் அழகிரி. இதனால் சிதம்பரம் தரப்புக்கும் அழகிரிக்குமிடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. 

 

congress



           

இந்த சூழலில், சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையானார் சிதம்பரம். அப்போதிலிருந்தே, அழகிரியை மாற்ற வேண்டும் என அவரிடம் போர்க்கொடி தூக்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். சிதம்பரமும் அழகிரியின் செயல்பாடுகளில் அதிர்ப்தியடைந்து வந்தார். முக்கிய விசயங்கள் எதுவும் அவரிடம் ஆலோசனை நடத்துவதில்லை சிதம்பரம். இப்படிப்பட்ட சூழலில், மத்திய மோடி அரசின் புதிய தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், மோடி அரசின் பட்ஜெட் குறித்தும் தேவக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
         

வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த பொதுக்கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைக்கப்படவில்லை. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில்தான் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் சிறப்புரையாற்றுகிறார்கள்.  தமிழக காங்கிரஸ் சார்பில் நடக்கும் ஒரு பொதுக்கூட்டம் மாநில தலைவர் தலைமையில் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
          

 இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘’ சிதம்பரத்திற்கும் அழகிரிக்குமான விரிசல் விரிவடைந்து கொண்டே வருகிறது. அழகிரியை மாற்றியே ஆக வேண்டும் என சிதம்பரத்திற்கு கொடுக்கப்படும் தொடர் வலியுறுத்தல்களால், தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார் சிதம்பரம். அதனால்தான், அவர் சிறப்புரையாற்றும் முக்கிய பொதுக்கூட்டத்தில் அழகிரியை அழைக்க வேண்டாம் என கே.ஆர்.ராமசாமியிடம் சொன்னதுடன், ராமசாமி தலைமையிலேயே கூட்டம் நடக்கட்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார் சிதம்பரம். அதன்படிதான் கூட்டம் நடக்கிறது. 



இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அழகிரியை தூக்கிவிட்டு  புதிய தலைவராக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிதம்பரம் ‘’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவை விமர்சித்து அறிக்கை வாசித்திருந்தார் கே.எஸ்.அழகிரி. அந்த அறிக்கை திமுக தலைமையை கோபப்படுத்தியது.  தங்களது அதிர்ப்தியை சோனியாகாந்திக்கும் அப்போது தெரிவித்தது திமுக தலைமை. இதனையடுத்து, அழகிரிக்கு கொடுக்கப்பட்ட அட்வைசின்படி, சமாதான அறிக்கை வெளியிட்டதுடன், மு.க.ஸ்டாலினை சந்தித்தும் சமாதானப்படுத்தினார் அழகிரி. ஆனாலும், அழகிரி மீது திமுகவின் கோபம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதானிருக்கிறது. அழகிரிக்கு எதிரான இப்படிப்பட்ட சூழல் இருந்து வருவதாலும், அடுத்தடுத்து தேர்தல்கள் வரவிருப்பதாலும் அழகிரியை மாற்றும் முடிவில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. இதை சரியாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் ப.சிதம்பரம், தனது மகனை தலைவராக்க பகீரத முயற்சி எடுத்துள்ளார்.
       

இதற்கிடையே, டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்திருப்பதில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் அப்- செட்டாகியிருப்பதால், தமிழக தலைவர் மாற்றம் குறித்து சோனியாவிடம் ஆலோசிக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறார் சிதம்பரம் என்கிறார்கள் காங்கிரஸ் கதர்சட்டையினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.