Skip to main content

இளம் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளிக்குத் தண்டனை! மார்க்சிஸ்ட் வரவேற்பு! கே. பாலகிருஷ்ணன் அறிக்கை...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

k balakrishnan cpim

 

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இளம் பெண்ணைப் பாலியல் கொடுமைப்படுத்திய குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பினை பெற புலன்விசாரணை மேற்கொண்டு வழக்கு நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், அரசு சிறப்பு வழக்கறிஞர், தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி அனைவருக்கும் பாராட்டுகள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் சிவக்குமார் என்பவர் கந்து வட்டித் தொழில் நடத்தி வந்துள்ளார். பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இவரிடம் ரூ. 1,000/- கடன் பெற்றுள்ளதைப் பயன்படுத்தி இவரைக் கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார். இதோடு விடவில்லை. தனது உதவியாளர் ஆமையனையும் வரவழைத்து அவரையும் இந்தப் பாலியல் வன்முறையில் ஈடுபடச் செய்துள்ளார். கொடூரத்தின் உச்சமாக இந்தப் பாலியல் வன்முறையை சிவக்குமார் வீடியோவில் பதிவு செய்துள்ளார். தொடக்கத்திலிருந்தே தன்னை விட்டு விடுங்கள், நான் பணத்தை உடனே கொடுத்துவிடுகிறேன் என அந்தப் பெண் கெஞ்சி அழுததையும் இக்கொடூரர்கள் பொருட்படுத்தவில்லை. வீடியோவை அழித்துவிடுங்கள் என அந்தப் பெண் மன்றாடிக் கேட்டுள்ளதை ஏற்க மறுத்து இந்தச் சம்பவத்தை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

 

அடுத்த சில நாட்களில் அந்த வீடியோவை ஒரு ஆபாச வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்டு பதறிய அந்தப் பெண்ணும், அவருடைய தாயாரும் என்ன செய்வது என்று புரியாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஊழியரான தோழர் வேலுச்சாமி அவர்களைச் சந்தித்துத் தங்களைக் காப்பாற்றும்படி கோரியுள்ளனர். தோழர் வேலுச்சாமியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இப்புகாரின் மீது உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை.

 

தன்மீது புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த சிவக்குமார் அடியாட்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்த தோழர் வேலுச்சாமியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பல கட்டப் போராட்டங்களை நடத்தியது. கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றக் கோரிய அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

 

தோழர் வேலுச்சாமி கொலை வழக்கை விசாரணை செய்திட திரு. டி.ராஜன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர் விசாரணை மேற்கொண்டிருக்கும் போது, பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண் இவரிடம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து புகார் அளித்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு சிவக்குமார் அவருடைய உதவியாளர் ஆமையன் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

விசாரணை முடிந்து, இவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது சாட்சிகளை மிரட்டிப் பணிய வைக்க அராஜகமான முயற்சிகளைக் குற்றவாளிகள் மேற்கொண்டனர். இதன் காரணமாக சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் நீதிமன்றத்தில் உறுதியாகச் சாட்சியமளித்துள்ளார்கள். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மாவட்ட நீதிபதி குற்றவாளி சிவக்குமாருக்கு (இன்னொரு குற்றவாளியான ஆமையன் இறந்துவிட்டார்) 32 ஆண்டுகள் தண்டனை வழங்கியதுடன், இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

2010ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், கடந்த 10 ஆண்டுகளாக குற்றவாளிகள் இந்த வழக்கை இழுத்தடித்தே வந்துள்ளனர். இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட திரு.டி.ராஜன் ஓய்வுபெற்ற பின்னர், பொறுப்பேற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபித்துள்ளனர். அரசு சிறப்பு வழக்கறிஞரான ஜி.சுசீலா அவர்கள் திறமையாக வாதிட்டுள்ளார். இறுதியில் மாவட்ட நீதிபதி திருமதி. சசிரேகா எம்.எல்., மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

 

சமூகத்தில் கடைக்கோடியில் உள்ள அப்பாவி மக்களுக்கும் இத்தகைய தீர்ப்பு ஒரு உந்து சக்தியாக அமைவதோடு, சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

 

http://onelink.to/nknapp

 

அப்பாவி பெண்ணுக்கு உதவி செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் தோழர் வேலுச்சாமி அவர்களது கொலை வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கிலும் குற்றவாளிகள் தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

 

இளம்பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடியது. இப்பணியில் ஈடுபட்ட தோழர் வேலுச்சாமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட போது, கிஞ்சிற்றும் தயங்காமல் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர சி.பி.ஐ.(எம்) அயராது பணியாற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நாமக்கல் மாவட்ட கட்சித் தோழர்களுக்கும், குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு அயராது பாடுபட்ட சி.பி.ஐ.சி.ஐ.டி. போலீசார், அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“மோடிக்கு செல்லப் பெயர் வைத்து உள்ளேன்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
I have given a pet name to Modi  Minister Udhayanidhi's speech

இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மணிக்கூண்டில் வேனில் இருந்தபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். நான் சொல்கிறேன் ஆமாம் கலைஞரின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரின் குடும்பம் தான். மோடி சொல்கிறார் தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பேசி வருகிறார். ஆமாம் தூக்கம் போய் விட்டது உங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது. உங்களை ஆட்சியிலிருந்து அகற்றாமல் நாங்கள் தூங்கப் போவதில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா அல்லது மிஸ்டர் 28 பைசாவா என மோதி பார்ப்போமா. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நமது வேலை ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்கை செலுத்தி மோடிக்கு தலையில் மிகப்பெரிய கொட்டு வைத்தாக வேண்டும். வைப்பீர்களா?

கடந்த 10 வருடமாக நரேந்திர மோடி அவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்து உள்ளேன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நமது முதல்வர்களும் பாதம் தாங்கிய பழனிச்சாமி என்று பெயர் வைத்துள்ளார். அதேபோல நரேந்திர மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்துள்ளேன். மிஸ்டர் 28 பைசா. கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு பக்கம் தலை வைத்து பார்த்ததில்லை. பிரதமர் மோடி கடந்த தேர்தலின் போது மதுரைக்கு வந்து ஒரே ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக கூறினார். அந்த செங்கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன். தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. தேர்தல் வந்ததும் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் புயல் அடித்தபோது வரவில்லை. கடந்த டிசம்பர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புயல் வெள்ளம் வந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களத்தில் நின்று மக்கள் பணி செய்தனர். ஆனால் ஒன்றிய பிரதமர் வரவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். எல்லாத்தையும் பார்த்துவிட்டு காசு தருகிறேன் என கூறினார். ஆனால் முதலமைச்சர் தார்மீக உரிமையில் எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன பணம் கொடுக்கிற மெஷினா என்ன கேள்வி கேட்டார். தமிழகத்தில் வெள்ளம் வந்த போதும், புயல் வந்த போதும் பிரதமர் மோடி எட்டிப் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என எங்களை கேள்வி கேட்டார். அதற்கு நான் திருப்பி கேட்டேன். இது உங்க அப்பன் வீட்டு பணமா...இது எங்கள் வரிப்பணம் என்று. இது தவறு என்றார். தமிழகத்துக்கு வெள்ளம், புயல் வந்தபோது வராத பிரதமர், தற்போது தேர்தல் என்றதும் ஓடி ஓடிவருகிறார். தேர்தல் வந்ததால் தமிழகத்தை சுற்றி வருகிறார். பாசிச ஆட்சியை விரட்டும் வரை நாம் அனைவரும் தூங்கக் கூடாது”எனப் பேசினார்.