Skip to main content

போராட்டம்... வேட்பாளர் தடை... அதகளப்படும் நாங்குநேரி இடைத்தேர்தல்...

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

சீன அதிபர் ஜின்பிங் சென்னை வருவதையொட்டி நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்கென்று பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நேற்றே சென்னைக்குப் பயணமாகி விட்டனர்.
 

nanguneri

 

 

ஆனால், கருப்பு கொடி, கோரிக்கைப் போராட்டம், வேட்பாளரை உள்ளே விட அனுமதி மறுப்பு என அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்குநேரியின் இடைத்தேர்தல்.

4,8719 வாக்குகளைக் கொண்ட தொகுதியில் மூன்றாம் எண்ணிக்கையிலிருப்பவர்கள் 30770 வாக்குகளைக் கொண்ட தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் குலத்தினர், தொகுதிக்குட்பட்ட ஆயர்குளம், அரியகுளம், பாளையஞ்செட்டிகுளம் உள்ளிட்ட 65 கிராமங்களில் இருக்கின்றனர். அவர்களின் நீண்ட மாத கோரிக்கையான பட்டியலின மக்கள் பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கப்பட வேண்டும் என்றதை மத்திய, மாநில அரசுகள் ஏற்று அறிவிக்காமலிருப்பதை இந்த இடைத்தேர்தலில் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். நேற்று மாலை தொகுதியின் மூலக்கரைப்பட்டியிருக்கும் இந்தப் பிரிவினரின் பகுதிக்குள் வாக்குகள் சேகரிக்கப் போயிருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சரான வெல்லமண்டி நடராஜன். அது சமயம் அ.தி.மு.க.வினர் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர்கள் படங்களைப் போட்டு நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்துள்ளனர். ஏற்கனவே கருப்பு கொடி கட்டிப் போராட்டம் நடத்திய அம்மக்கள், “யாரைக் கேட்டு எங்கள் தலைவர்களின் படத்தைப் போட்டீர்கள். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வாக்கு கேட்டு உள்ளே வரவேண்டாம்”, என்று அமைச்சரை வழி மறித்துள்ளனர்.

அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் தலையிட்டும் முடியாமல் போகவே, முடிவில், அமைச்சர் பின் வாங்க நேரிட்டுள்ளது. அதே போன்று பாளை யூனியனில் வருகிற சிவந்திபட்டி கிராமத்தின் முட்டுக்கல் பகுதி மக்கள் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணணை உள்ளே அனுமதிக்காமல் தடைபோட்டனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியோ அ.தி.மு.க.விற்கு ஆதரவில்லை என்று அறிவித்து விட்டார். ஆனால் இலைத்தரப்போ, விவகாரங்கள், எதிர்ப்புக்களைச் சமாளிப்பதற்கு வைட்டமின் ”ப”வை ஆயுதமாக்க முனைந்திருக்கிறது.

அதே சமயம் காங்கரசின் வேட்பாளரான ரூபி மனோகரன் எந்தக் குற்றச்சாட்டுக்கும் இலக்காகதவர் என்றாலும் வாக்கு சேகரிப்பின் போது உடன் செல்லும் தொகுதியின் எக்ஸ் எம்.எல்.ஏ.வான வசந்தகுமாரால் விவகாரங்கள் ஒரு சில இடங்களில் தலை தூக்கியுள்ளன. தொகுதிக்குட்பட்ட நாங்குநேரியின் மறுகால்குறிச்சிக் கிராமத்திற்குள் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் ரூபிமனோகரனுடன் வசந்தகுமார் போயிருக்கிறார். அவரைப் பார்த்து டென்ஷனான கிராமமக்கள்.
 

nanguneri

 

 

‘நீங்க ஒங்க இஷ்டத்துக்கு எம்.பி.யாவுவீக. யாரைக் கேட்டு எம்.எல்.ஏ. பதவியை விட்டீக’ என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளனர். பின்னர் அது சமாளிக்கப்பட்டது. தற்போது வசந்தகுமார் தவிர்க்கப்படும் நபராகி விட்டார்.

தேர்தல் பணிகளில் காங்கிரசின் பங்கு குறைவாக இருந்தாலும் அதனை ஈடுகட்டும் வகையில் தொகுதியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையிலான பெரிய ட்ரூப் தொகுதி முழுக்குப் பரவி நிற்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கூட்டணியிரை உள்ளடக்கிய பூத்கமிட்டி அமைத்தது போன்று வார்டுகளில் வாக்கு சேகரிக்கும் கமிட்டியும் அமைத்து ஸ்கெட்ச் போட்டு பணியை மேற்கொள்ளும் இந்தச் செயல்பாடு கைக்குப் பக்கபலமான ஆயுதம். போதாக்குறைக்கு கடந்த மூன்று நாட்களாக ஊராட்சித் திண்ணைக் கூட்டம், தேர்தல் பிரச்சாரம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் தீவிரச் செயல்பாடுகள் காங்கிரஸ் தரப்புகளே மலைக்கிற விஷயம் மட்டுமல்ல, களத்தில் நிற்பது காங்கிரசல்ல தி.மு.க. என்ற உணர்வுகளே எதிரொலிக்கின்றன.

போராட்டம், புறக்கணிப்பு, தடை. வாக்கு சேகரிப்பு என்று கலகலக்கிறது நாங்குநேரி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.