Skip to main content

“தமிழ்நாட்டுல இருக்குறவங்களுக்கு இங்க என்ன வேலன்னு நான் கேட்கல” - ஆளுநர் தமிழிசை

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

"I don't ask the people in Tamilnadu what they want to do here" said Governor Tamilisai

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் மற்றும் விசிக எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தனது கருத்தினை தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுகாதாரத்திலும் கல்வியிலும் புதுவை தனது கவனத்தை செலுத்தி சேவை செய்து வருகிறது. ஜிப்மர், அரசாங்க மருத்துவமனைகள் மக்களுக்கு சேவை செய்யவே இருக்கிறது. ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் உயர் பரிசோதனைக் கூடங்களில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அவர்கள் சொல்லி இருந்தார்கள். நான் உடனே சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இணை அமைச்சருக்கும் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டணம் அதிகமாக உள்ளது என்றும் இன்னும் அதை குறைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

 

என்னைப் பொறுத்தவரை இந்த மக்களையும் சிகிச்சை பெறும் தமிழக மக்களையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஜிப்மரை கேட்டால் எனக்கு ஏன் கோவம் வருகிறது என கேட்கிறார்கள். எனக்கு கோவம் எல்லாம் வரவில்லை. “ஏழை மக்களை உறிஞ்சி..” என்ற வார்த்தைகளை எல்லாம் போடுகிறார்கள். இன்னும் ஒன்று சொல்கிறார்கள். முன்னாள் மத்திய அரசு இருந்ததை விட இப்போது குறைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

 

பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை மருத்துவமனை முன் செய்ய வேண்டாம். சிலர் சொல்கிறார்கள் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு மத்திய அரசின் உதவியோடு நடக்கும் மருத்துவமனைகளை கேட்பதற்கு உரிமை உள்ளது என சொல்கிறார்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது. இயக்குநரை சென்று பார்த்து என்ன வசதிகள் உள்ளது என கேளுங்கள். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் ஆர்ப்பாட்டம் தான் நடத்துவோம் என்றால் நடத்தட்டும். கவலை இல்லை. ஜிப்மரில் கொரோனா காலத்தில் அனைத்து மருத்துவர்களும் உயிரைப் பணையம் வைத்து நோயாளிகளைப் பாதுகாத்தார்கள். எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவில்லை. நான் மருத்துவமனைக்குள் சென்று பார்த்துவிட்டு வந்தேன். 

 

இவ்விவகாரத்தை பொறுத்தவரை போராட்டம் நடத்தித்தான் நம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லை. ஆக்கப்பூர்வமாக செயல்படலாம். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இங்கு என்ன வேலை என நான் கேட்கவில்லை. நான் கூறியதெல்லாம், உங்கள் முகவரி புதுச்சேரியில் உள்ளது. விழுப்புரம் மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். உங்கள் தொகுதியில் இருங்கள் என சொன்னேன்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.