Skip to main content

யாருமே அமைச்சராக இருக்க முடியாது: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
narendra modi - Edappadi K. Palaniswami



பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 
 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமானப் போக்குவரத்து தொடங்கவும் கோரி உள்ளேன். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினேன். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தினேன். சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்கவும் கோரி உள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன். உள்ளாட்சித்துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் நிரந்தர கப்பல்படை தளம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன். காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்ததோடு, மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளேன். 
 


தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன. அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று உணர்வு வரவில்லையா?. 
 

யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். வழக்கின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். யார் பெட்டிசன் கொடுத்தாலும் பதவி விலக வேண்டும் என்றால், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் யாருமே அமைச்சராக இருக்க முடியாது. 
 

மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டீர்களே?
 

யார் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டது. நீங்கள் தவறான தகவலை சொல்லுகிறீர்கள். அண்மையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைப்பெற்றது. அதில் 93 சதவீதம் வெற்றிப்பெற்றிருக்கிறோம். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் செல்வாக்கு இழந்திருந்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் தேந்தெடுக்கப்பட்டிருப்பார்களா? இது தவறான செய்தி. 
 

டிடிவி தினகரன் ஓ.பி.எஸ்ஸை சந்தித்தாக கூறியுள்ளார். அதற்கு ஓ.பி.எஸ். சந்தித்தது உண்மைதான் என்று கூறியிருக்கிறாரே? இவர்கள் சந்தித்தது உங்களுக்கு தெரியுமா? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

டிடிவி தினகரன் ஊடகங்கள் வாயிலாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு துணை முதல் அமைச்சர் தெளிவான விளக்கத்தை ஊடங்களை அழைத்து தெரிவித்துவிட்டார். அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்படுமா?
 

இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. அறிவித்தப் பிறகு யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள், அதற்கு தக்கவாறு எங்கள் கட்சி முடிவு எடுக்கும். 
 

இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம் என்ன?
 

காரணத்தைத்தான் தெளிவாக சொல்லிவிட்டார்களே. இது தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டியது. இது நாங்கள் முடிவு எடுப்பது அல்ல. இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - இ.பி.எஸ்.!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
“Should not charge for summer training camp” - EPS

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் கூறும் திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.