Skip to main content

''இந்தியாவை சீரழிக்கத்தான் திராவிட மாடலா?'' -பா.ஜ.க.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Dravidian model to ruin India? -BJP Radhakrishnan Speech

 

இலங்கையிடம் உள்ள கச்சத்தீவை மீட்பதில் இந்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளதாகவும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைய எனவும் பா.ஜ.க முன்னாள் எம்பி கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

நேற்று ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,பேசும்பொழுது, "தமிழக நிதி அமைச்சர் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நிலக்கரி, மின்சாரம் போன்றவைகளுக்கு எவ்வளவு இவர்கள் பாக்கி வைத்து உள்ளார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்த வெள்ளை அறிக்கையை அவர்கள் வெளியிட வேண்டும். அதேபோன்று ஜி.எஸ்.டி. வருவாயில் எல்லா மாநில அரசுக்கும் தர வேண்டியதை மத்திய அரசு முறைப்படி தான் வழங்கி வருகிறது. தி.மு.க. அரசு 'திராவிட மாடல்' எனக்கூறி தமிழர்களை சீரழித்துள்ளார்கள். அதேபோன்று இந்தியா முழுதும் சீரழிக்க தான் இந்தியா முழுவதும் 'திராவிட மாடல்' பரவுகிறது என்று கூறுகிறார்கள்.

 

தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்குக் காரணம் முந்தைய பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட பல்வேறு அணைகள், பிறகு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்தான் காரணம். ஆனால் காமராஜர் போன்ற தலைவர்களை இவர்கள் எவ்வளவு இழிவாகப் பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அவர் மறைந்த பிறகு அவர்களையும் தங்களது திராவிட மாடலுக்கு ஒரு ரோலாக சேர்த்துக் கொள்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தாய்த் தமிழை மிக உயர்வாக மதிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்மொழி உயர்ந்தது எனக் கூறியுள்ளார். எனவே ஹிந்தியும் சமஸ்கிருதத்தையும் மத்திய அரசு புகுத்துகிறது எனக் கூறுவது தவறானதாகும். ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சியற்றவர். அதனால்தான் அவர் மோடி அரசு நாட்டை சீரழித்து விட்டது என கூறுகிறார். ஆனால் இன்று உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவை உயர்வாகக் கருதுகின்றன. மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறிக் கொண்டிருக்கிறது.

 

பஞ்சு விலை உயர்ந்ததால் நூல் விலை உயர்ந்தது . பஞ்சு விலை கட்டுப்படுத்த இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இன்னும் 45 நாட்களுக்குள் இறக்குமதிகள் துவங்கும். பஞ்சு விலை குறைந்து நூல் விலையும் குறையும். அப்போது ஜவுளித் தொழில் நெருக்கடி தீரும். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு, சிமெண்ட் விலை கடும் உயர்வு, கேரளாவுக்கு அரிசி கடத்தல், காவல்துறையில் அரசியல் தலையீடு துவங்கிவிடும். இப்போது காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து குறை கூறிக்கொண்டிருக்காமல் தமிழகத்தின் தொழில், வேளாண்மை முன்னேற்றத்திற்கு திமுக அரசு பாடுபடவேண்டும். மற்ற மாநிலங்களில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தேர்தல் விதிகளில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியில் இருக்க முடியாது .அதன்படிதான் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இது வாரிசு அடிப்படையில் வருவதல்ல. பாரதிய ஜனதா கட்சி ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்பதை இந்த உட்கட்சி தேர்தல் மூலம் நாங்கள் மீண்டும் நிரூபித்துள்ளோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.