Skip to main content

எனக்கு பதவி கலைஞர் கொடுத்தது... அதிமுகவில் இணையப் போகிறாரா கே.பி.ராமலிங்கம்? கோபத்தில் திமுக தலைமை!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம். பழைய அ.தி.மு.க.காரர். திமுகவில் அழகிரி ஆதரவாளர். லோக்சபா-ராஜ்யசபா முன்னாள் எம்.பி என முக்கியத்துவங்கள் உண்டு. இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் பத்திரிகைகளில் அவருடைய கருத்துகள் இடம்பெறும். அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டாம் என்ற அறிக்கையில், ஆளுங்கட்சியையும், பிரதமரையும் வானளாவப் புகழ்ந்ததோடு, "ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுவது என்பது, தங்களை வளர்த்துக் கொள்வதற்கும், தங்களின் தனித்துவத்தை காட்டுவதற்கும்தான் பயன்படுமேயன்றி, நாட்டுக்குப் பயன்படாது' என்று, திமுக தலைமையை விமர்சித்த நிலையில், அவரது கட்சிப் பதவியைப் பறித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.


  dmk



ஒழுங்கு நடவடிக்கை குறித்து கே.பி.ராமலிங்கத்திடம் பேசினோம். "கரோனா வைரஸால் ஊரே முடங்கிக் கிடக்கிறது. இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்தை தட்டிக்கொடுத்துதான் வேலை வாங்க வேண்டுமே தவிர, அவர்கள்மீது குறைசொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது என்பதற்காக பொதுவாகத்தான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன். நான் திமுக விவசாய அணி செயலாளராக இந்த அறிக்கையை வெளியிடவில்லை. இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராகத்தான் என் கருத்தைச் சொல்லி இருக்கிறேன். திமுக தலைவருக்கு என்னை பதவியில் இருந்து நீக்க உரிமை இருக்கிறது. அதில் நான் குற்றம் காணவில்லை. எனக்கு இந்த பதவியைக் கொடுத்தவர் கலைஞர்; பறித்துக் கொண்டவர் தளபதி. பரவாயில்லை'' என்ற கே.பி.ராமலிங்கத்திடம், ''நீங்கள் வேறு கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வருகின்றனவே?,'' எனக்கேட்டோம்.
 

nakkheeran app



''1990ல் திமுகவில் சேர்ந்தேன். 1996 முதல் என் பதவி பறிப்புக்கு முன்பு வரை திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்திருக்கிறேன். கடந்த 24 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட எந்த நடவடிக்கைக்கும் ஆளானதில்லை.

திமுக விவசாய அணி செயலாளர் பதவி இல்லாவிட்டாலும்கூட, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவராக செயல்படுவேன். விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். தப்பு செய்தால் கண்டிப்பேன். கரோனா முடியும் வரை, எந்த ஒரு அரசியல் லாவண்யம் செய்யும் சிந்தனையும் எனக்கு இல்லை. கரோனா சீசன் முடிந்த பிறகு பேசுவோம். ஆனால் ஒன்று... எந்த விளைவுகளுக்கும் அதற்கு உண்டான எதிர் விளைவுகளும் இருக்கத்தான் செய்யும்'' என்று பொடி வைத்து முடித்தார் கேபிஆர்.

அவர் ஆளுங்கட்சியில் சேரலாம்; அல்லது ரஜினி கட்சித் தொடங்கும்பட்சத்தில் அதில் சேரலாம், பா.ஜ.க. அழைக்கிறது என யூகங்கள் வெளியாகின்றன. கரோனா காலத்திற்குப் பிறகு, கே.பி.ராமலிங்கத்தின் வியூகம் என்ன என்பது தெரியும்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக-தேமுதிக கூட்டணி முறிவா?;பாஜகவை நெருங்கும் பிரேமலதா

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Will the AIADMK-DMK alliance break up?-Premalata approaching the BJP

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

அதேநேரம் திமுக தலைமையிலான தனது கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே அரவணைத்துக் கொண்டு சென்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவரின் சாதுர்யமான அரசியலால் திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் வரவில்லை. முக்கியமான முடிவுகள் அனைத்தையும் கூட்டணியினரோடு கலந்தாலோசித்து எடுத்து வருகிறார் ஸ்டாலின். இதனால் திமுக கூட்டணி உறுதியாக இருந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து பரப்புரை பணிகளை தொடங்கியுள்ளது.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பாஜக-பாமக கூட்டணி, இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இதற்காக இரு கட்சிகளும் கலந்துபேசி பாமக போட்டியிடும் என்றும், பாமகவின் வெற்றிக்கு பாஜக உதவும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அதிமுக-தேமுதிக கூட்டணி,தேர்தலுக்குப் பிறகு முறிந்து விட்டது என்கிறார்கள்.

அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தனது கூட்டணிக் கட்சியான  தேமுதிகவுடன் கலந்தாலோசிக்காமலே அதிமுகவினரிடம் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக அறிவித்தார் எடப்பாடி. இந்த முடிவு, தேமுதிக பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயம், தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து, 'இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தன்னிச்சையாக அறவித்தார் பிரேமலதா.

ஆக, 'அதிமுக-தேமுதிக கூட்டணி உறவு, தேனிலவு முடிந்ததும் முறிந்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்திருப்பதால் பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார் பிரேமலதா' என்கிறார்கள் தேமுதிக மாநில நிர்வாகிகள்.

Next Story

'என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்'- மோடி பேச்சு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
mn

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி தொடரும் நிலையில் இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தலும் நிரூபணம் ஆகி விட்டதாக பிரதமர் மோடி பேசி உள்ளார். மேலும் கங்கை மாதா தன்னை தத்தெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு முதன்முறையாக பிரதமர் மோடி வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற 'பிஎம் கிசான் சமேலன்' என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''மூன்றாவது முறையாக ஒரு அரசு அமைவது என்பது அபூர்வமான ஒரு செயல் மூன்றாவது முறையாக தான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. காசி வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமல்லாமல் நாட்டின் பிரதமரையும் தேர்வு செய்துள்ளனர்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. மூன்றாவது முறையாக நானே பிரதமராக வரவேண்டும் என்பதற்காக நம்பிக்கை வைத்து வாக்களித்த அத்தனை வாக்காளர்களுக்கும் எனது நன்றி. இந்த தொகுதி வெறும் நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் தேர்ந்தெடுக்க வில்லை மாறாக நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வலுவான அரசாக பாஜக அரசு அமைந்திருக்கிறது. அதன் காரணமாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். மூன்றாவது முறையாக என்னை கங்கை மாதா தத்தெடுத்துள்ளார்''  என நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.