Skip to main content

'தொடர் புறக்கணிப்பு...'-வேறு மாநிலத்திற்கு ஆளுநராகும் தமிழிசை...?

Published on 17/04/2022 | Edited on 17/04/2022

 

 'Continuing boycott ...' - Tamilisai to become governor of another state ...?

 

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு செயலாற்றிவரும் தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 1.9.2019 அன்று தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத்  தொடர்ந்து புதுச்சேரியில் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டு செயலாற்றி வந்தார். ஆளுநராக பொறுப்பேற்றபின் நடைபெற்ற தெலுங்கானாவின் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரின் உரை புறக்கணிக்கப்பட்டது தமிழிசைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தெலுங்கானா முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு, மோதல் போக்கு நடந்து வந்தது. அதேபோல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட யாத்திரி கோவில் திறப்பு விழாவிலும் தமிழிசை சௌந்தரராஜன் புறக்கணிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் அண்மையில் டெல்லி சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் இந்த பிரச்சனைகள், புறக்கணிப்புகள் தொடர்பாகக் கருத்துக்களை முன் வைத்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை தெலுங்கானா சந்திக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழிசையை மாற்றிவிட்டு புதிய ஆளுநரை தெலுங்கானாவுக்கு நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமுகமாக பணியாற்றும் வகையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழிசை ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கேரள ஆளுநராக உள்ள ஆரிப் அகமதுகான் தெலுங்கானாவின் கவர்னராக நியமிக்கப்படலாம், அதே நேரத்தில் கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராகவோ அல்லது புதுவைக்கு முழுநேர ஆளுநராகவோ தமிழிசை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.