Skip to main content

உங்களுக்கே தெரிகிறதே.. ? கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே... மதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் எச்.ராஜா...

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

hhh

 

டெல்லியிலும் பா.ஜ.க ராஜாதான் தமிழகத்திலும் பா.ஜ.க ராஜாதான். இந்தியாவில் இரண்டு ஆன்மீக கட்சிகள் இருந்து ஒரே கொள்கையின் கீழ் கூட்டணி வைத்தால் தவறில்லை. ரஜினி இணைவது அவரது விருப்பம். சசிகலா கட்சியில் கூட்டணி வைப்பது என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம் அவர் அத்தையாக தான் இருப்பார். சித்தப்பா ஆக முடியாது. எனவே கூட்டணிக்கு பேச்சே இல்லை என பா.ஜ.க மாநிலச் செயலர் ஹெச்.ராஜா மதுரையில் பேட்டி அளித்தார். 

 

மதுரை மாநகர் வடக்கு தொகுதி, மதுரை மத்திய தொகுதி பூத் கமிட்டி கூட்டம், கட்சியினரிடையே செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (04.09.2020) மாலை பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா பேசியதாவது: தமிழகத்தில் 44 ஆயிரம் கோவில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக வரும். தமிழக கோவில்களில் ஆண்டுதோறும் தமிழக அரசு தணிக்கை அதிகாரிகளைக் கொண்டு தணிக்கை செய்ய உட்படுத்த வேண்டும். 

 

இரண்டு ஆன்மீக கட்சிகள் ஒரே கொள்கையுடன் இருந்தால் கூட்டணி வைப்பதில் தவறில்லை. ரஜினி ஆன்மீக அரசியல் எங்களுடன் இணைந்து செயல்படலாம். அல்லது, அவருடைய கொள்கை எங்கள் பா.ஜ.கவுடன் ஒத்து போகலாம். டெல்லியில் மட்டும் பா.ஜ.க ராஜா இல்லை. தமிழகத்திலும் பா.ஜ.க ராஜாதான்.

 

சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது, இம்மாதம் வருகிறார் என்பது உங்களுக்கே தெரிகிறதே என்றார். கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே என்றார். 3 தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுமா என்ற கேள்விக்கு, இது குறித்து பா.ஜ.க மாநில குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து அறிக்கை வெளியிடுவோம் என்றார்.

 

சசிகலா வந்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி தொடருமா? பா.ஜ.க நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம். அப்பாவுக்கு அண்ணனாக இருந்தால் பெரியப்பா என்போம். தம்பியாக இருந்தால் சித்தப்பா, தங்கையாக இருந்தால் அத்தை மட்டுமே. அத்தைக்கு மீசை முளைத்தால் பா.ஜ.க ஆதரவு தரும் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.