Skip to main content

அதிமுக கட்சியினர் நாகையில் இறுதிக்கட்ட பிரச்சாரம்...!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

"நான் வெற்றிபெற்றால், வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றால், முதல்வர் எடப்பாடி ஆணைக்கிணங்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க, மாவட்ட அமைச்சர் அண்ணன் ஓ.எஸ்.மணியன்,  அண்ணன் காமராஜ் அவர்களின் பரிந்துரைப்படி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்" என நாகை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் தாழை,சரவணன் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். 

 

admk

 

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாழை,சரவணன் நேற்று மாலை நாகையில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அதற்கு முன்னதாக, அதிமுகவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டார். பின்னர்தான் வெற்றி பெற்றால், வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றால், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்களின் ஆணைப்படி, விவசாயிகள், மீனவர்கள், மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை  தீர்க்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்