Skip to main content

“ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்” - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

AMIT SHAH

 

ராஜஸ்தான் மாநிலத்திற்கு நேற்று (05.12.2021) பயணம் மேற்கொண்ட அமித் ஷா, அங்கு மாநில பாஜக தலைவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ராஜஸ்தான் அரசைப் பாஜக கவிழ்க்காது என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

 

இதுதொடர்பாக பாஜக தலைவர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது, “தங்கள் அரசாங்கம் கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்திலயே அவர்கள் (காங்கிரஸ்) எப்போதும் இருக்கிறார்கள். ஆட்சியைக் கவிழ்க்கப்போவது யார்? யாருமே இல்லை. உங்கள் அரசை (காங்கிரஸ் அரசை) பாஜக ஒருபோதும் கவிழ்க்காது. பாஜக மக்களிடம் சென்று 2023இல் வலுவான வெற்றியுடன் ஆட்சிக்கு வரும்.

 

உங்கள் அரசு சிறப்பாகச் செயல்படுவதாக நீங்கள் நினைத்தால், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வரப்போகிறது. ராஜஸ்தானிலும் தேர்தலை நடத்துங்கள். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 2023 வரையிலான உங்கள் பதவிக் காலத்தை நிறைவு செய்ய வேண்டுமெனவும், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டுமெனவும் நாங்கள் விரும்புகிறோம்.

 

காங்கிரஸ் வறுமைக்குப் பதிலாக ஏழைகளை அகற்ற உழைத்தது. ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தது மோடி அரசுதான். கிராமப்புற வீடுகளுக்கு மின்சாரம், எரிவாயு இணைப்புகள், கழிப்பறைகள் ஆகியவற்றை வழங்கியது. சிமெண்ட் வீடுகளையும் அளித்தது.” இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.