Skip to main content

போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் தயாராகும் விரைவுச்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

 Warplanes prepare to land  Prime Minister Narendra Modi lays the foundation stone for the expressway

போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் தயாராகும் கங்கை விரைவுச்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (18/12/2021) அடிக்கல் நாட்டினார்.

 

கங்கை விரைவுச்சாலை மீரட் மற்றும் பிரயக்ராஜ் உட்பட மாநிலத்தின் 12 மாவட்டங்களை இணைக்கும் 594 கி.மீ. நீளம் கொண்ட அதிவேக விரைவுச்சாலை. 594 கி.மீ. நீள ஆறு வழி கங்கா விரைவுச்சாலை 36,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடையும் போது உத்தரப்பிரதேசத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களை இணைக்கின்ற மாநிலத்தின் மிக நீண்ட விரைவுப் பாதையாக இது இருக்கும். 

 

ஷாஜஹான்பூர் விரைவுச்சாலையில் அவசரமாக விமானம் புறப்படவும், விமானப்படை விமானங்கள் தரையிறங்கவும் 3.5 கி.மீ. நீளம் கொண்ட ஓடுபாதை அமைக்கப்பட உள்ளது. 

 

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கங்கை விரைவுச்சாலை மூலம் புதிய தொழிற்சாலைகள் உத்தரப்பிரதேசத்திற்கு வரும். முன்பு இருந்தவர்கள் காகித அளவிலேயே திட்டங்களைக் கொண்டு வந்தனர். உங்கள் பணத்தைக் கொண்டு தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொண்டனர். உத்தரப்பிரதேசத்தில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு அரசி வீடுகளை வழங்கவுள்ளது. உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையும் போது நாடு முன்னேறும்; எனவே தான் அரசின் கவனம் உத்தரப்பிரதேச மாநில வளர்ச்சியில் உள்ளது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஏழைக்காக உழைக்கும் அரசு உருவாகியுள்ளது" என்றார். 

 

இந்த விழாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.