Skip to main content

மட்டமான கழிப்பறை… மோசமான சாப்பாடு… கொதித்த கரோனா மருத்துவர்கள்! குறைதீர்த்த உ.பி. அரசு!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


தமிழகத்தில் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் இறந்தால் அவர்களுக்கான இறுதிக் காரியங்கள் நடத்தக்கூட வழியில்லாதபடி எதிர்ப்பு எழுகிறது. அவர்களுக்கு உரிய இறுதி மரியாதைச் செலுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையென என பிரச்சனையெழுந்தது. இதையடுத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெறும். இதற்கு இடையூறு செய்பவர்கள் கைதுசெய்து சிறையிலடைக்கப்படுவர் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
 

 

உத்தரபிரதேசத்திலும் கரோனா மருத்துவர்கள் விஷயத்தில் வேறுவிதத்தில் சர்ச்சையெழுந்திருக்கிறது. உ.பி. மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் தற்சமயம் 43 கரோனா தொற்றாளர்கள் காணப்படுகின்றனர். இப்பகுதியில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, மருத்துவர்கள் தங்குவதற்கு அரசு பள்ளியொன்று கெஸ்ட் ஹவுசாக ஒதுக்கப்பட்டது.
 

 

அந்தப் பள்ளியில் மருத்துவர்களுக்குப் போதிய வசதி இல்லாததையடுத்து அங்கு நிலவும் சூழலை மருத்துவர்கள் மூன்று வீடியோக்களாக எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர். இதையடுத்து மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

up


 

http://onelink.to/nknapp


அந்த மூன்று வீடியோக்களில் ஒன்றில், “இப்ப அதிகாலை 3 மணி. இங்க கரெண்ட் இல்லை. ஒரே ரூம்ல நான்கு படுக்கைப் போட்டிருக்காங்க. இந்த அறையில மின்விசிறிகூட வேலைசெய்யலை. இங்க இருக்கிற பாத்ரூமைக் காட்டுறேன் பாருங்க. சிறுநீர் அறையில குழாயே இல்லை. கழிப்பறை அடைச்சுக்கிட்டு இருக்கு” என ஒருவர் நிலவரத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.
 

up


இரண்டாவது வீடியோவில் கரோனா பாதுகாப்பு உடையிலிருக்கும் மருத்துவர் ஒருவர், “ஒரு பள்ளியோட பெரிய வகுப்பறையில படுக்கை வசதி செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு ரூம்லயும் நாலு படுக்கைங்க. ஒருத்தர்கிட்ட கரோனா தொற்று இருந்தா மற்றவங்களுக்கு பரவக்கூடாதுனுதான் குவாரண்டைன் பண்றாங்க. பாத்ரூம் பற்றி புகார் கொடுத்ததும் நடமாடும் கழிவறையைக் கொண்டுவந்து வெச்சாங்க. இன்னும் இங்க மின்சாரம் வரலை. 20 லிட்டர் தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவந்து நாலுபேரும் ஷேர் பண்ணிக்கோங்கனு சொல்றாங்க” என்கிறார்.

 

up


மூன்றாவது வீடியோவில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தரமில்லாத உணவைக் காட்டுகிறார்கள். “பாலிதீன் காகிதத்தில் பூரியும் சப்ஜியும் ஒன்றாகக் கலந்து இருப்பதைத் தருகிறார்கள். இதுதான் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தரப்படுகிறது” என்கிறது முகம் காட்டாத ஒரு குரல்.
 

இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் பரவி வைரலானதும் உ.பி. தலைமை மருத்துவ அலுவலர் எஸ்.கே. ஷர்மா அந்தப் பள்ளியைப் பார்வையிட்டுவிட்டு மருத்துவர்களை வேறொரு கெஸ்ட் ஹவுஸ்க்கு மாற்ற உத்தரவிட்டார். அத்தோடு மருத்துவர்களுக்கு நல்ல உணவும் கிடைக்கும்படி ஒரு சமையலறையையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
 

இதை முதலிலே செய்திருந்தால், இந்தக் கெட்ட பெயரைத் தவிர்த்திருக்கலாமே!
 

- க.சுப்பிரமணியன்


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.