Skip to main content

இந்தியா மாணவர்களைத் தாக்கி உக்ரைன் வீரர்கள் அட்டூழியம்; அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள்?

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

ukraine

 

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன்கராணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள்,  தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தச்சூழலில் உக்ரைன் ரஷ்யாவோடு பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளது.

 

இதனிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்களை, உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் இந்தநிலையில் இந்திய மாணவர்கள் உக்ரைனிலிருந்து அண்டை நாடான போலந்தில் நுழைவதை உக்ரைன் வீரர்கள் தடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டிற்குள் செல்ல முயலும் இந்திய மாணவர்களை உக்ரைன் இராணுவத்தினர் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

 

அதேபோல் உக்ரைன்-போலந்து எல்லையிலிருந்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேசிய மான்சி சவுத்ரி என்ற இந்திய  மாணவி, இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவர்கள் எங்களை சித்திரவதை செய்கிறார்கள். இந்திய மாணவர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். எல்லையை கடந்து போலந்துக்குச் செல்ல எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. மாணவிகள் கூட துன்புறுத்தப்படுகிறார்கள். முடியைப் பிடித்து இழுக்கிறார்கள். இரும்பு தடிகளால் தாக்குகிறார்கள் . சில மாணவிகளுக்கு எலும்பு முறிவும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

 

இந்தியத்  தூதரக அதிகாரிகள் எங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளித்து உதவி செய்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு படையினர் எங்களை எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை. யாரேனும் கடக்க முயன்றால், கம்பியால் தாக்குகின்றனர். அவர்கள் முகத்தில் குத்துகிறார்கள். நேற்று அவர்கள் துப்பாக்கிச் சூடுகூட நடத்தினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச்சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய அரசு, மீட்புப் பணிக்கான திட்டத்தை உக்ரைனில் சிக்கியுள்ளவர்களிடமும், அவரது குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் - போலந்து எல்லையில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களையும், இதுபோன்ற காணொளிகளைப் பார்க்கும் அவர்களது குடும்பத்தினரையும் நினைத்து எனது மனம் வேதனைப்படுகிறது. எந்த பெற்றோருக்கும் இதுபோன்ற நிலை வரக்கூடாது. இந்திய அரசு உடனடியாக, மீட்பு பணிக்கான திட்டத்தை உக்ரைனில் சிக்கியுள்ளவர்களிடமும், அவரது குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும். நமது மக்களை நாம் கைவிட்டுவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச்சூழலில் நேற்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் மோடி, இன்று மீண்டும் ஒரு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார். இதற்கிடையே ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் வி.கே.சிங் ஆகிய மத்திய அமைச்சர்கள் இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்கவும், மாணவர்களுக்கு உதவவும் உக்ரைனின் அண்டைநாடுகளுக்கு செல்லவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கடந்த 26 ஆம் தேதி, “மீட்பு திட்டத்தை செயல்படுத்துவதில், உக்ரைனின் எல்லைப்பகுதிகளில் கூட இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லை” எனவும், ”சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைக்க எல்லைப் பகுதிகளுக்கு மத்திய அரசு, ஒரு குழுவை கூட அனுப்பவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது” எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.