Skip to main content

கண்களில் ரத்தம்...கதறிய பிரபல டிவி நடிகை...போலீஸ் விசாரணை!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகை நளினி நேகி. இவர் ஒஷிவரா போலீசாரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில், சில வருடங்களுக்கு முன்பு நானும் பிரீத்தியும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக தங்கியிருந்தோம். பின்பு ஒன்றாக தங்க விருப்பம் இல்லாததால், சில நாட்கள் கழித்து நான் தனியாக இருக்க விரும்பினேன். எனவே அந்த அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி தனியாக வீடு பார்த்து அங்கு தங்கினேன். இந்த நிலையில் சமீபத்தில் பிரீத்தி தனக்கு வீடு கிடைக்கவில்லை எனவும் அதனால் சிறுது நாட்கள் தன்னுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். 

 

actress



நானும் அவளை என்னோடு தங்கி கொள்ள அனுமதித்தேன். நான் தற்போது இருக்கும் வீடு 2 படுக்கை அறை கொண்ட வீடு  என்பதால் என்னோடு தங்கிக்கொள்ள அனுமதித்தேன். கொஞ்ச நாள் கழித்து பிரீத்தியின் அம்மாவும் வீட்டில் அவளோடு தங்கினார். தான் வீடு காலி செய்ய எனது அம்மா உதவிக்கு வந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் பிரீத்தி. ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யாமல் என்னுடைய வீட்டிலேயே தங்கி விட்டனர். சிறிது நாள் கழித்து ஊரில் இருந்து என்னுடைய அப்பா, அம்மா என்னை பார்ப்பதற்காக வருவதாக சொன்னார்கள். இதனையடுத்து ஊரில் இருந்து என்னை பார்க்க எனது பெற்றோர் வருவதால் வீட்டை காலி செய்யுங்கள் என்று பிரீத்தி மற்றும் அவரது அம்மாவிடம் கூறினேன். இதற்கு அவர்களும் சரி என்று சம்மதம் தெரிவித்தனர். 


இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நான் எனது நண்பருடன் ஜிம்மிற்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தேன். அப்போது பிரீத்தியின் அம்மா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்டேன். அப்போது பிரீத்தியிடம் அவளது அம்மா நான் அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டியதாக கூறினார். இதை நம்பிய பிரீத்தி என்னை அசிங்கமாக திட்ட ஆரம்பித்தாள். பின்பு உடனே அவரது அம்மா கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசால் என் முகத்தில் அடித்தார். பின்னர், இருவரும் சேர்ந்து என்னை கொடூரமாக தாக்க ஆரம்பித்துவிட்டனர். கிட்டதட்ட என்னை அவர்கள் கொள்ள முயற்சி செய்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் புகைப்பட ஆதாரங்களுடன் அவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்களும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.