Skip to main content

"இரு கரம் கூப்பி கேட்கிறேன்" - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

pm modi

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் இன்றோடு 23வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் நாளுக்கு நாள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மத்திய வேளாண் துறை அமைச்சர், விவசாயிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

 

இந்தநிலையில், மத்திய பிரதேச மாநில விவசாயிகளிடம் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த உரை, இந்தியா முழுவதும் 23,000 கிராமங்களில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது பேசிய மோடி, விவசாயச் சட்டங்கள் ஒரே நாள் இரவில் கொண்டுவரப்படவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தவறாக வழி நடத்த வேண்டாம் எனவும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்வதாகக் கூறினார். 

 

பிரதமர் மோடி நிகழ்த்திய உரை வருமாறு "வேளாண் சட்டங்கள் ஒரே இரவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த 20-30 ஆண்டுகளில், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவான விவாதங்களை மேற்கொண்டன. அனைத்து அரசியல் கட்சிகளையும் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். அரசியல் கட்சிகள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும். வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு 6-7 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இப்போது திடீரென்று, பொய்களின் மூலம் அரசியல் விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. நாங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அகற்ற விரும்பினால், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும்? குறைந்தபட்ச ஆதாரவிலை பற்றி எங்கள் அரசு தீவிரமாக உள்ளது, அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் விதை பருவத்திற்கு முன்பு அதை அறிவிக்கிறோம்". 

 

cnc

 

"விவசாயிகள் என்ற பெயரில் இந்த இயக்கத்தைத் தொடங்கியவர்கள், அரசாங்கத்தை நடத்துவதற்கு அல்லது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பு கிடைத்தபோது, என்ன செய்தார்கள் என்பதை நாடு நினைவில்கொள்ள வேண்டும். அவர்கள் எவ்வளவு இரக்கமற்றவர்களாக இருக்க முடியும் என்பதற்கு சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை மிகப்பெரிய சான்றாகும். 8 ஆண்டுகளாக சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை பரிந்துரைகளில் அமர்ந்திருந்தனர். தங்கள் அரசாங்கம் விவசாயிகளுக்கு அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை என்பதை அவர்கள் உறுதிசெய்தனர், எனவே அவர்கள் அறிக்கையை மறைத்து வைத்தனர்".

 

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்  

 


 

சார்ந்த செய்திகள்