Skip to main content

இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்த கரோனா... ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

kl

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 29 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,038 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 93,528 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 1.40 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்