Skip to main content

புதிய கெட்டப்பில் புதிய திட்டங்களை தொடங்கிய பிரதமர் மோடி..

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

hgfhgh

 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் வேலைகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். நேற்று அசாம் சென்றிருந்த நிலையில் இன்று அருணாச்சலில் இதாநகர் பகுதியில் பொது கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்தபடி பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் 110 மெகா வாட் திறனுள்ள நீர்மின்திட்டம் உள்ளிட்ட  4000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி திறந்து வைக்கிறார். இந்த நீர்மின் நிலையம் மூலம் அம்மாநிலத்திற்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் மின் தேவையையும் பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்