Skip to main content

“மோடியால் பிரதமர் அலுவலகத்துக்குக் கண்ணிய குறைவு” - மன்மோகன் சிங் தாக்கு

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Manmohan Singh criticized Modi has dishonored the Prime Minister's office"

ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், நாளை மறுநாள் (01-05-24) இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட 57 தொகுதிகளில் ஏழாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் இறுதிக்கட்டத் தேர்தலையொட்டி பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை மோடி குறைத்துள்ளார். பிரதமர் மோடி இயல்பில் முற்றிலும் பிளவுபடுத்தும் மிக மோசமான வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். அவர் என்னிடம் சில பொய்யான அறிக்கைகளையும் காரணம் காட்டியுள்ளார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்தை மற்ற சமூகத்திலிருந்து தனித்து காட்டியதில்லை. 

விவசாயிகளின் தேசிய சராசரி மாத வருமானம் நாளொன்றுக்கு ரூ.27 மட்டுமே. அதே சமயம் ஒரு விவசாயியின் சராசரி கடன் ரூ.27,000 ஆகும். எரிபொருள் மற்றும் உரங்கள் உட்பட உள்ளீடுகளின் ஜி.எஸ்.டியுடன் இணைந்து அதிக விலையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் கற்பனை செய்ய முடியாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது. பணமதிப்பிழப்பு பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது வலிமிகுந்த தவறான நிர்வாகம் ஆகியவை ஒரு மோசமான சூழ்நிலையை விளைவித்துள்ளன. 

பெரும்பாலும் பஞ்சாபைச் சேர்ந்த 750 விவசாயிகள், டெல்லியின் எல்லையில் இடைவிடாமல் பல மாதங்களாகக் காத்திருந்து இறந்தனர். லத்திகளும், ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல், நாடாளுமன்றத்தின் அரங்கத்தில் இருந்து பிரதமர் எங்கள் விவசாயிகளை ஒட்டுண்ணிகள் என்று வாய்மொழியாகத் தாக்கினார். அவர்களுடைய ஒரே கோரிக்கை, அவர்களைக் கலந்தாலோசிக்காமல் அவர்கள் மீது சுமத்தப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான். கடந்த பத்து ஆண்டுகளில், பஞ்சாப், பஞ்சாபிகள் மற்றும் பஞ்சாபியர்களை ஜாதி வெறியாக்குவதில் பா.ஜ.க அரசு எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சொந்த மாநிலத்தில் மோடியை தோற்கடிப்போம்” - ராகுல் காந்தி பேச்சு

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Rahul Gandhi speech they will defeat Modi in our own state

கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். அப்போது, ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். 

குறிப்பாக அவர், “பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால், பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்.பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி பேசியதன் எதிரொலியாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பா.ஜ.க இடையே காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஐந்து காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர், “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குஜராத்தில் அவர்களை தோற்கடிக்கப் போகிறோம். நரேந்திர மோடியையும் பா.ஜ.கவையும் அயோத்தியில் தோற்கடித்தது போல் குஜராத்தில் தோற்கடிப்போம். 

விமான நிலையம் கட்டப்பட்டபோது அயோத்தி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அயோத்தியில் இருந்து யாரையும் அழைக்காததால் அயோத்தி மக்கள் கொந்தளித்தனர். அயோத்தியை மையமாக கொண்டு அத்வானி தொடங்கிய இயக்கம், அயோத்தியில் அந்த இயக்கத்தை இந்தியா கூட்டணி தோற்கடித்துள்ளது.

நமது அலுவலகத்தை அவர்கள் உடைத்த விதத்தில், நாம் அவர்களின் ஆட்சியை உடைக்கப் போகிறோம். ஆனால், குஜராத் காங்கிரசில் குறைபாடுகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து சரியாக போட்டியிடவில்லை. 2017ஆம் ஆண்டில் 3 மாதங்கள் கடுமையாக உழைத்து நல்ல பலன் கிடைத்தது. இப்போது நமக்கு 3 வருடங்கள் உள்ளன, இறுதிக்கட்டத்தை பின்தள்ளுவோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். கட்சித் தலைமை, நான், என் சகோதரி உட்பட அனைவரும் உங்களுடன் நிற்கப் போகிறோம்” எனக் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசினார்.

Next Story

பட்டப்பகலில் சிவசேனா கட்சித் தலைவர் மீது வாளால் தாக்குதல்; பரபரப்பு சம்பவம்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Sword incident on Shiv Sena party leader in broad daylight in punjab

சிவசேனா தலைவரை பட்டப்பகலில் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தாபர். இவர் லூதியானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் போலீசார் ஒருவர் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், அவரை வழமறித்து தாங்கள் கொண்டு வந்த வாளால் தாக்கினர். அவர்களை தடுக்க முயன்ற போலீஸ்காரரை அங்கு வந்த மற்றொருவர் சாலையில் ஓரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இதையடுத்து, அவர்கள் இருவரும் சந்தீப்பை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சாலையில் மயங்கி கீழே விழுந்தார். அதன் பின்னர், அவர்கள் இருவரும் அந்த இருசக்கர வாகனத்தை எடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அன்று காலை ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தீப் தாபர், சீக்கியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இரண்டு பேர் கொண்டு கும்பல் சந்தீப்பை வாளால் தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் சிவசேனா கட்சித் தலைவரை வாளால் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சிரோமணி அகாலி தளம் ஹர்சிம்ரத் கவுர் படேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.