Skip to main content

“ராகுல் காந்தி சின்ன குழந்தை”- மம்தா பானர்ஜி

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இந்த மாநிலத்தில் 42 தொகுதிகளிலும் 4 கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
 

mamta

 

“பிரதமர் மோடியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மம்தா பானர்ஜி மாநிலத்தை முன்னேற்றாமல், வளர்ச்சிப்பாதைக்கு செல்லவிடாமல் வைத்துள்ளார்” என்று ராகுல் காந்தி கடந்த வாரம் மால்டா நகரில் நடந்த காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் குற்றம்சாட்டினார்.
 

இந்நிலையில், இதுகுறித்து மாம்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த மம்தா, “ராகுல் காந்தி சின்ன குழந்தை. ராகுல் மனதில் என்ன நினைக்கிறாரோ அதைப் பேசுகிறார். இதற்கு மேல் எந்த கருத்தையும் நான் கூறமாட்டேன். இதைத் தவிர வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள் " என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்