car near ambani house

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, மும்பையின் கம்பல்லா ஹில்பகுதியில் ஆன்டிலியா எனஅழைக்கப்படும் ஆடம்பரமானஇல்லத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில்முகேஷ் அம்பானிவீட்டின்அருகே, சந்தேகத்துக்கு இடமானகார்ஒன்று நின்றது. இதனையடுத்து வெடிகுண்டுநிபுணர்கள் அந்தக் காரைசோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் 20 கிலோஜெலட்டின் குச்சிகள் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரிலிருந்து கடிதம் ஒன்றும், சிலநம்பர்பிளேட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இந்த நம்பர்பிளேட்டில்ஒன்று, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனத்தின் நம்பர்பிளேட்டோடுஒத்துப்போவதாகப் போலீஸார்தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்தசி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், வியாழக்கிழமை (25 பிப்.) இரவு ஒருமணிக்கு இரண்டு கார்கள்அப்பகுதிக்கு வருவதும், ஒருவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகேஒரு காரைநிறுத்திவிட்டு, இன்னொரு காரில்ஏறிசெல்வதும் பதிவாகியிருந்ததாகவும் போலீஸார்தெரிவித்தனர்.

Advertisment

இதுகுறித்து விசாரித்தகாவல்துறையினர், அம்பானிவீட்டருகேநிறுத்தப்பட்டிருந்த காரின்உரிமையாளரைக் கண்டுபிடித்தனர்.மன்சுக் ஹிரென்என்ற அந்த உரிமையாளர் தனதுகார்முன்னரேகாணாமல்போய்விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் கார்காணாமல்போனதுகுறித்துபுகாரளித்திருப்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் இன்றுமன்சுக் ஹிரென், தானேவில்உள்ள கல்வாகால்வாய்ப் பகுதியில்சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் அந்த கால்வாயில் குதித்துத்தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மும்பைகாவல்துறை ஆணையர் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.மன்சுக் ஹிரென்மரணம் குறித்துதேசியப்புலனாய்வு முகமைவிசாரிக்கவேண்டும்எனமஹாராஷ்ட்ராமுன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.மன்சுக் ஹிரென்மரணம், அம்பானிவீட்டருகேவெடிபொருட்களுடன் கார்நின்றவிவகாரத்தைமேலும் பரபரப்பாகியுள்ளது.

இதனிடையே ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு டெலிகிராமில், வெடிபொருட்கள் நிரம்பிய காரை தாங்கள்தான்அம்பானிவீட்டருகேநிறுத்தியதாகவும், தங்கள் கோரிக்கைகளை அம்பானி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தது. இதன்பிறகு, தங்கள் தான் உண்மையானஜெய்ஷ்-உல்-ஹிந்த் எனக் கூறிய, அதேபெயரிலான இன்னொரு அமைப்பு, அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் நின்றகாருக்கும்தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தது. இதுகுறித்து விசாரித்தபோலீஸார், முதல் கடிதம் போலியானதாக இருக்கலாம்எனத் தெரிவித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment