Skip to main content

‘அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை’- மம்தா பேட்டி

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 

mamta banerjee

 

 

இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து காரசாரமாக இதுகுறித்த விவாதம் அங்கு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
 

இந்நிலையில், “காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்க முடியாது, இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் இல்லை, அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை, உடனடியா அவர்களை விடுவிக்க வேண்டும். ” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்