Skip to main content

மராட்டியத்தில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கானவர்கள் கரோனா தொற்றால் உயிரிழப்பு!!! ஒரே நாளில் 3,607 பேர் பாதிப்பு!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020
gh



உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்று மட்டும் மராட்டியத்தில் 3,254 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று 3,607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 152 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  இன்றைய கரோனா தொற்றையும் சேர்த்து அந்த மாநிலத்தில் இதுவரை 97,648 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

 

சார்ந்த செய்திகள்