Skip to main content

மனைவியை விஷப்பாம்பை விட்டுக் கடிக்கவைத்துக் கொன்ற கணவன்... அதிர்ச்சி பின்னணி...

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

kerala girl snake biting case

 

கேரளாவில் திருமணமான இரண்டே வருடங்களில் மனைவியைப் பாம்பை விட்டுக் கடிக்கவைத்து கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் அடூரைச் சேர்ந்தவர் சூரஜ் (27). தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த சூரஜிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உத்ரா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 100 சவரன் நகை, கார் உள்ளிட்ட வரதட்சனைகளோடு உத்ராவைத் திருமணம் செய்துகொண்ட சூரஜ் அடூரில் உள்ள தனது வீட்டில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 2 ஆம் தேதி, வீட்டிற்கு வெளியே உத்ராவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இதனைப் பார்த்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அங்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஏப்ரல் 22 அன்று உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்துள்ளார்.
 


இந்தச் சூழலில் மே 7- ஆம் தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டின் படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உத்ராவின் பெற்றோர், தங்கள் மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் உத்ரா விஷப் பாம்பு கடித்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தனது மக்களின் இறப்பில் சந்தேகமடைந்த சித்ராவின் தந்தை இதுகுறித்து போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், கணவர் சூரஜ் தான் உத்ராவைப் பாம்பை விட்டுக் கடிக்கவைத்துக் கொன்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாம் திருமணம் செய்வதற்கு இடையூறாக இருந்த உத்ராவைக் கொல்ல திட்டமிட்டு 10,000 ரூபாய் கொடுத்து மார்ச் 2 அன்று விஷப்பாம்பு ஒன்றை வாங்கி வீட்டில் விட்டுள்ளார் சூரஜ். இந்த முயற்சி தோல்வியில் முடிந்து, உத்ரா பிழைத்துக்கொண்டதை அடுத்து மீண்டும் மே 2 ஆண்டு 10,000 ரூபாய் கொடுத்து மற்றொரு பாம்பை வாங்கி, பெற்றோர் வீட்டிலிருந்த உத்ராவின் அறையில் விட்டுள்ளார் சூரஜ். இதில் பாம்பு இரண்டுமுறை உத்ராவை கடித்து அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக இருந்த சூரஜ், அதனைப் பயன்படுத்தி பாம்புகளைப் பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சூரஜிற்குப் பாம்பு விற்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.