Skip to main content

தெலுங்கானாவில் கர்ப்பிணி பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

தெலங்கானா மாநிலத்தில் பிரசவத்தின்போது, 'சிசு' தலை துண்டிக்கப்பட்டு இறந்த நிலையில், தாயும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினார்கள்.

தெலங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டம் நடிம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரியை, அவரது கணவர் 2 நாட்களுக்கு முன்னர் அச்சம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காகச் சேர்த்தார். சில மணிநேரம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தாயின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி, ஐதராபாத் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

 It is Telangana tragedy!

 

அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது தான், அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது. அதாவது, வயிற்றில் இருந்த சிசு தலை துண்டிக்கப்பட்டு தலையில்லாத உடல் மட்டுமே கர்ப்பப் பையில் இருந்தது. அச்சம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால், குழந்தையின் தலை துண்டானது. ஆனால், இதை மறைத்து அவர்களை ஐதாரபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்போது, சாவித்ரியும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 It is Telangana tragedy!

 

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அச்சம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் வாக்குவாதம் செய்ததோடு, அங்கிருந்த மருத்துவ உபகரணங்களையும் அடித்து நொறுக்கி ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.

 

 It is Telangana tragedy!

 

கர்ப்பம் என்பது ஒரு தவம்; குழந்தை பிறப்போ ஒரு வரம்! கர்ப்பிணியானவள் ஈருயிர் அல்லவா! டெக்னாலஜியில் எவ்வளவோ முன்னேறிவிட்ட இந்தக் காலத்திலும், மருத்துவ அலட்சியம் காரணமாக இதுபோன்ற கொடுமைகள் நடக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.