Skip to main content

திருப்பதியில் தமிழகம் இடம் வாங்கும்... -சேகர்ரெட்டி

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
Interview with dhevaasthan Member Sekar reddy

 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள திருமலை பெருமாள் கோயில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் திருமலை சென்று பெருமாளை தரிசனம் செய்வார்கள். 1950க்கு முன்பு வரை மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த திருப்பதி பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அது ஆந்திரா வசமானது.

ஆந்திராவின் கட்டுப்பாட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு என பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளது ஆந்திரா அரசாங்கம். அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டிக்கு உறுப்பினர்கள் நியமனம் செய்யும்போது, மேற்கண்ட மாநிலங்களின் சிபாரிசுப்படி உறுப்பினர்களை நியமனம் செய்யும். திருமலையில் ஏதாவது பணிகள் செய்யும்போது, அந்த உறுப்பினர்கள் மூலமாக அந்தந்த மாநில அரசுகளின் கருத்துகளை தேவஸ்தான போர்டு கேட்டு செயல்படும்.

 

Interview with dhevaasthan Member Sekar reddy

 

திருப்பதி வரும் பக்தர்களில் 30 சதவிதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், 20 சதவிதம் பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள், 40 சதவிதம் பேர் ஆந்திரா – தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். மீதி 10 சதவிதம் பேரே மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள். கோயிலுக்கு வருபவர்களின் வருமானம் 90 சதவிதம் ஆந்திரா மக்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு பலவித வசதிகள் திருப்பதி திருமலையில் செய்துயிருந்தாலும், அங்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை ஆந்திரா மக்களுக்கு மட்டுமே. இதனால் மற்ற மாநில பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் அதிகம் சிரமப்பட்டனர்.

இதனை கவனத்தில் கொண்டு கர்நாடகா அரசாங்கம், தங்களது மாநில பக்தர்கள் தங்க தனியாக பக்தர்கள் ஓய்வு அறைகள் கட்ட இடம் கேட்டது. திருமலை முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீண்ட இழுபறிக்கு பின் தேவஸ்தானம் 2008ல் 7.05 ஏக்கர் நிலத்தை 50 வருட குத்தகைக்கு கர்நாடகா அரசுக்கு வழங்குவதாக அறிவித்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம். அந்த இடம் பின்னர் முறையாக பத்திரபதிவும் செய்து தரப்பட்டது.

அந்த இடத்தில் கர்நாடகாவில் இருந்து செல்லும் பக்தர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஜூலை 4ந்தேதி பெங்களுரூவில் நடைபெற்றது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார், கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி போன்றோர் நேரடியாக சென்று கலந்துக்கொண்டனர்.

ஏழுமலையான் கோயில் சுற்றியுள்ள மாடவீதியில் மேற்கு பகுதியில் கர்நாடகாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 1.94 ஏக்கர் இடத்தை மட்டும் காலியாக விட்டுவிட்டு மீதியிடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் தந்தது. கட்டிடம் கட்டுதவற்கான முறையான பணி இரண்டு மாநில முதல்வர்களும் விரைவில் செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு கர்நாடகாவில் இருந்து செல்லும் பக்தர்கள் குறைவு. அப்படியிருக்க அந்த மாநில அரசு தன் மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, தனியாக பக்தர்கள் ஓய்வு விடுதியை அமைக்க இடம் வாங்கி, கட்டிடம் கட்டுகிறது. அதே திருப்பதிக்கு தமிழகத்தில் இருந்து அதிக பக்தர்கள் செல்கிறார்கள். தங்க இடம் கேட்கும்போது அவர்களும் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், பாதுகாவலர்களால் பல அவமானத்துக்கு ஆளாகிறார்கள். இதுபற்றி தமிழக அரசுக்கு பலமுறை புகார் சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது என மேற்கண்ட செய்தியினை கடந்த வாரம் நமது நக்கீரன் இணையத்தில் வெளியிட்டுயிருந்தோம்.

 

Interview with dhevaasthan Member Sekar reddy

 

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் என்கிற பிரிவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள சேகர்ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம், திருமலையில் தமிழகத்திற்கென பக்தர்கள் தங்க கட்டிடம் கட்ட இடம் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு கடிதம் தரவுள்ளோம். இதற்காக அடுத்த மாதம் நடைபெறும் தேவஸ்தான கமிட்டி கூட்டத்தில், தமிழக அரசின் கோரிக்கை கடிதத்தை தருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். விரைவில் திருமலையில் இடம் பெற்று தமிழக அரசின் சார்பில் பக்தர்கள் தங்க ஓய்வு விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.