Skip to main content

“மாநில எல்லைகள் கடந்து அன்போடு பழகுவோம்” - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

Governor Tamilisai Soundararajan about Migrent workers

 

மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் 'பெண்கள் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும்' என்பதற்காக சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு இந்த நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் 500க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்று சைக்கிளில் பல்வேறு பகுதிகளில் வலம் வந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த தமிழிசை, “புதுச்சேரியில் அதிகளவில் காய்ச்சல், உடல்வலி, சுவாசக் கோளாறு அறிகுறிகளோடு இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் அதிகம் பேர் புறநோயாளிகளாக வருகின்றனர். ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அச்சம் கொள்ள தேவையில்லை. அதிகம் மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். வைரஸ் நோய் காற்றில் தான் பரவுகின்றது. ஆகவே பொது இடங்கள், கூட்டம் மிகுந்த இடங்களில் முகக் கவசம் அணிவது நல்லது” என்று குறிப்பிட்டார்.

 

Governor Tamilisai Soundararajan about Migrent workers

 

அவரிடம் செய்தியாளர்கள்  வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக கேட்டதற்கு, “வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி. இதில் நாம் இந்தியாவில் உள்ள எல்லோரையும் சகோதரத்துவத்தோடுதான் பார்க்க வேண்டும். நம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் பிற மாநிலத்தில் பணியாற்றுகின்றார்கள். சகோதரத்துவத்தோடு மொழி, மாநில எல்லைகள் கடந்து அன்போடு பழகும்போதுதான் இந்த வேறுபாடுகள் வராது. அது வதந்தியா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அச்சத்தோடு அவர்கள் தமிழகத்தையும் சரி பிற மாநிலத்தையும் விட்டு போகின்றார்கள் என்று சொல்வது சரியானதாக இருக்காது. கொள்கை வேற்றுமைகள் இருந்தாலும், மொழி வேற்றுமைகள் இருந்தாலும் அனைவரும் இந்திய தேசத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்” என்றார்.


பட்ஜெட் தொடர்பாக கேட்டதற்கு, “புதுச்சேரியை பொறுத்துவரை மகளிர் துன்பப்படக் கூடாது என்பதற்காகத்தான் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கூட அறிவித்தார்கள். ஆனால் அங்கு கொடுக்கவில்லை. ஆனால், புதுச்சேரியில் வழங்கப்பட்டு வருகின்றது. மத்தியப் பிரதேசத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டிலும் பெண்களுக்கான பல திட்டங்கள், கர்ப்பிணிகளுக்கான பல நலத்திட்டங்கள் வரவுள்ளது” என்று குறிப்பிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.