Skip to main content

மார்ச் 31- ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து!

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 

இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324 லிருந்து 341 ஆக அதிகரித்துள்ளது. 

all trains cancel indian railway announced

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை மார்ச் 31- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சரக்கு ரயில் சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


அதேபோல் நாடு முழுவதும் அனைத்து புறநகர் ரயில்களும் மார்ச் 31- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்