Skip to main content

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, உயிருடன் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Child

 

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் சிறுமி தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டுக்குள் வந்த மூன்று பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கவுகாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமி தந்த மரண வாக்குமூலத்தின் மூலம் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் அந்த சிறுமியுடன் ஒரே பள்ளியில் படிப்பவர்கள் என்பதும் மைனர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதும். மேலும், மூன்றாவது மற்றும் முக்கியக்குற்றவாளி ஜாகீர் உசைன் தப்பியோடிவிட்டதாகவும், வலைவீசி தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த வாரம் இதே நாகோன் மாவட்டத்தில் உள்ள காம்பூர் பகுதியில், கணவனைக் கட்டிப்போட்டுவிட்டு, மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த எட்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்